Showing posts with label சுஜாதா. Show all posts
Showing posts with label சுஜாதா. Show all posts

Saturday, February 28, 2009

சுஜாதா - ஆண்டு 1 - அரங்கன் நலமா?


எனக்கும் வாத்தியாருக்கும் என்ன உறவு என்று நினைக்கும்போது, தேசிகன் சொல்வது போல் "நமக்கிங்கு உறவேல் ஒழிக்க ஒழியாது" என்றெல்லாம் கூற முடியாது. பரிச்சயம் அத்தனையும் அவரது எழுத்துக்களுடன் மட்டுமே. அம்பலம் சாட்டில் ஒரே ஒரு முறை பேசியிருக்கிறேன்.

அவரை எப்போது வாசிக்க ஆரம்பித்தேன் என்று கரெக்டாக சொல்ல முடியவில்லை. ஆனால், ஆரம்பித்தது கணேஷ்-வசந்த கதைகளிலிருந்து. அப்பருவத்தில், ஒரு பிரச்சினையை அணுகும் கணேஷின் திறமையும், வசந்த்தின் சுட்டித்தனமும், ஜொள்ளும் உடனடியாக ஒரு ஈர்ப்பை உண்டு பண்ணியது. கமல், ரஜினி என்று நடிகர்களுக்கு, அவர்கள் படங்களைப் பார்த்து தீவிர ரசிகர்கள் அமைகிறார்கள். ஆனால், சுஜாதா ஆணா/பெண்ணா என்று கூடத் தெரியாமல், அவரது தனித்துவமான எழுத்து என்ற அடையாளத்தின் பேரில் மட்டும், தீவிர ரசிகராகி, அவரை வாத்தியாராக ஏற்றுக் கொண்ட அக்கால இளைஞர் அனேகர். அடியேனும் அந்த கூட்டத்தில் ஒருவன்.

"பிரிவோம் சந்திப்போம்" ஏற்படுத்திய தாக்கத்தில், பல ஆண்டுகளுக்குப் பிறகு பிறக்கவிருக்கும் மகளுக்கு மதுமிதா என்று பெயரிட்டேன் :)

அந்த subtle (உறுத்தாத) ஹியூமர் அவர் எழுத்துகளில் (அது கதையோ/கட்டுரையோ) விரவி இருக்கும். Non technical ஆசாமிகளுக்குக் கூட புரியும்படியாக, அதே சமயம் சுவாரசியமாக நவீன டெக்னிகல் சமாச்சாரங்களைக் கூட, ஒரு கதை சொல்வது போல சொல்ல ஒரு ஆள் பிறந்து வர, பலப்பல ஆண்டுகள் ஆகலாம்.

இங்கு தமிழ் எழுத்தாளர்களுக்கு பஞ்சமில்லை. அது போல, டெக்னிகல் ஆட்களுக்கும் பஞ்சமில்லை. வாத்தியார் போல எஞ்சினிய்ராக, விரிந்த வாசிப்போடு, ஆங்கிலம்/தமிழ் என்று இரண்டிலும் மிக்க புலமையோடு, மிக்க தன்னடகத்துடன் ஒரு ஆசாமி சல்லடை போட்டுத் தேடினாலும் கிடைக்கப் போவதில்லை :(

இந்த வருட புத்தக கண்காட்சியில், உயிர்மையில் அவரது "கண்ணீரில்லாமல்" என்ற சிறு கட்டுரைத் தொகுப்பை வாங்கினேன். என்ன அது "கண்ணிரீல்லாமல்" என்று பார்த்தால், வாத்தியார் யாப்பு, கர்னாடக/மேற்கித்திய சங்கீதம், ஐன்ஸ்டைன், இந்து மதம் ஆகிய சமாச்சாரங்களை நாம் ரொம்பவும் அழாமல் தன்னிடமிருந்து தெரிந்து கொள்ள அழைக்கிறார் என்று விளங்கியது :) நிஜமாகவே, யாப்பிலக்கணத்தை தெளிவாக புரிந்து கொள்ள முடிந்தது, ஒரே வாசிப்பில், மனதில் நிற்கும் வண்ணம்!

அதான் வாத்தியார் எழுத்தின் சக்தி. யாப்பு சொல்லித் தரும்போது கூட அந்த நகைச்சுவை இருக்கிறதே, "தமிழ் பண்டிதர்களிடம் போகாதீர்கள். "எட்டடி தரவு கொச்சக் கலிப்பா" போன்ற சொற்கள் எல்லாம் கனவில் வந்து பயமுறுத்தும்" என்பார்! யாப்பு பற்றி இதை விட எளிமையாக யாரும் விளக்க முடியாது.

அது போல, 'ரத்தம் ஒரே நிறம்' நாவலில், முத்து என்ற நாவலின் கதாநாயகனுக்கும், மெக்கன்ஸி என்ற பரங்கியனுக்கும் நடக்கும் "கட்டிப்புடி" சண்டையை வர்ணிக்கும்போது, 'முத்து மேல் மெக்கன்ஸி.. மெக்கன்ஸி மேல் முத்து... நிலைமை சற்று குழப்பமாக இப்போது முத்துன்ஸியாக உருண்டார்கள்' என்பார் :)

இரண்டு பதிவுகளில் வாத்தியாரை "இன்னுமோர் நூற்றாண்டு இரும்" என்று வாழ்த்தியிருக்கிறேன், அதாவது 200 ஆண்டுகள். சொல்லி 3 ஆண்டுகளுக்குள் அரங்கனைப் பார்க்க புறப்பட்டுப் போய் விட்டார். இல்லை, அவருக்கு மிகவும் பிடித்த திருமங்கையாழ்வாராகக் கூட இருக்கலாம்!

வாத்தியாரின் மறைவுக்குப் பிறகு வலைப்பதிவர்கள் எழுதிய அஞ்சலிப் பதிவுகளின் இணைப்புகள் இந்த எனது பதிவில் உள்ளன

சுஜாதா தன்னைப் பற்றி: என் எழுத்து, என்னைப் பல தேசங்களுக்கு அழைத்துச் சென்றிருக்கிறது. பல வகைப்பட்ட மனிதர்களைச் சந்திக்க வைத்திருக்கிறது. பிரைவேட் ஜெட்டி லிருந்து ஃப்ரீமாண்ட் மிஷன் பீக் மலை யுச்சி மாளிகை வரை அனுமதித்திருக்கிறது. பெயர் தெரியாத வாசகர்கள் நள்ளிரவில் கூப்பிட்டுப் பாராட்டியிருக்கிறார்கள். மனைவிமார்கள் அழுதிருக்கிறார்கள். கணவன்கள், மனைவிகள் மேல் சந்தேகப்பட்டுத் தற்கொலை செய்து கொள்ளுமுன், கடைசி ஆறுதலுக்கு என்னை விளித்திருக்கிறார்கள். ரோஜா வெளிவந்த சமயத்தில், பெங்களூருக்குத் தனியாக ஓடி வந்த இளம்பெண் அதிகாலை ஜலஹள்ளியில், அரவிந்த சாமியுடன் என்னை மண முடி! என்று கதவைத் தட்டி யிருக்கிறாள். "ஆ" கதையைப் படித்துவிட்டு, "என் மகளை மணம் செய்துகொள்ள வேண் டும்" என்று திருநெல்வேலில் இருந்து வந்த மனநிலை சரியில்லாத இளைஞரும், பாலம் கதையைப் படித்து விட்டு என்னைக் கொல்ல வர தேதி கேட்டிருந்த கோவை வாசியும் என் வாசகர்கள்தான். வாழ்க்கையின் அத்தனை பிரச்னைகளுக்கும், முதுகுவலியில் இருந்து முண்டகோபனிஷத் வரை யோசனை சொல்லியிருக்கிறார்கள்; கேட்டிருக்கிறார்கள். மிகச் சிறந்த நண்பர்களையும், அற்புதக் கணங்களையும் என் எழுத்தால் பெற்றிருக்கிறேன். அதுதான் என்னுடைய நோபெல்!

Sunday, December 07, 2008

479. கடவுள்களின் பள்ளத்தாக்கு! - இது தான்டா சுஜாதா!

சுஜாதாவின் இந்தக் கட்டுரையை வாசித்தவுடன் பதிய வேண்டும் என்று தோன்றியது.  ஒரு புண்ணியத் தல பயணக் கட்டுரையைக் கூட இவ்வளவு சுவாரசியமாக, மிளிரும் நகைச்சுவையுடன், வாசகனின் நெஞ்சைத் தொடும் வகையில் எழுதுவது வாத்தியாருக்கு மட்டுமே வசப்படும்!!!  வாசகரைக் கடடிப் போடும் இந்த விவரணையும், வர்ணனையும் வாத்தியாருக்கு மட்டுமே சாத்தியம்!! மனுஷன் போய் சேர்ந்து விட்டார் :-( 
 
சுஜாதாவைப் போல் ஜனரஞ்சகமாக (கதை/கட்டுரை) எழுத  இப்போது ஆள் கிடையாது.  அவரது திறமையில் ஒரு 20-25% தான் இன்றைய எழுத்தாளர்ளிடம் இருக்கிறது. அதற்கே என்ன ஒரு கர்வம்/அலட்டல் :-(
 
எ.அ.பாலா
 
**********************************************
'திவ்ய தேச க்ஷேத்ர தீர்த்த யாத்திரை செய்யக் குதூகலமுள்ள பக்தர்களுக்கு, அவை சம்பந்தமான சகல விவரங்களையும் தெரிவிப் பதற்கான பத்ரி யாத்திரை விளக்கு'

- மேற்கண்ட தலைப்பின் கீழ் பிரதிவாதி பயங்கரம் அண்ணங்க ராச்சாரியார் 40 வருஷங்களுக்கு முன் ஒரு சுவாரஸ்யமான புத்தகம் எழுதியிருக்கிறார். அவர் போனபோது யாத்திரையில் உள்ள கஷ்ட-சுகங்களையும், தபால் ஆபீஸ் விவரங்கள் உட்பட்ட காட்சிகளையும் சம்ஸ்கிருதமும் தமிழும் மயங்கிக் கலந்த ஒரு வசீகர வசன நடையில் விவரித்திருக்கிறார்.

8-ம் நூற்றாண்டைச் சேர்ந்த திருமங்கையாழ்வார் தன் பாசுரத்தில்... 'முதுகு பற்றிக் கைத் தலத்தால் முன்னொரு கோல் ஊன்றி, விதிர்விதிர்த்துக் கண் சுழன்று மேற்கிளை கொண்டிருமி, இது வென் அப்பர் முத்தவா றென்று இளையவர் ஏசா முன், மது உண் வண்டு பண்கள் பாடும் வதரி வணங்குதுமே' என்று முதுகில் ஒரு கை வைத்துக் குச்சி ஊன்றி இருமிக்கொண்டு, மேல் மூச்சு வாங்கிக்கொண்டு - சின்னப் பையன்கள் 'தாத்தா போறார் பாரு' என்று கேலி பண்ணுவதற்கு முன்னமே பத்ரி போய் சேவித்து விடுவோம் என்று வற்புறுத்தியுள்ளார். எனவே, பத்ரி நாராயணனை வணங்கப் பயணப்படத் தீர்மானித்து விட்டேன்.

முதலில், ஆக்ஸ்போர்டு அட்லாஸ் ஒன்று வாங்கிப் பார்த்தால், பத்ரி, உத்தரப்பிரதேசத்தில் இந்தியாவின் உச்சந்தலையில் திபெத், சைனா எல்லைகளின் அருகில் இருக்கிறது. இருந்தும், அதற்குப் போகிற வழிகள், பயண ஏற்பாடுகள் எல்லாம் மிகச் சுலபம். காசு வேண்டும்; அவ்வளவுதான். டெல்லிக்குப் போய்ப் பணத்தைக் கொடுக்க ஒப்புக் கொண்டவுடன், பணிக்கர் ட்ராவல்ஸ் 15-வது நிமிஷத்தில் காரை டெல்லி ஏஷியாட் கெஸ்ட் அவுஸூக்கு அனுப்பி விட்டார்கள். பஸ்ஸிலும் போகலாம்.

நான் 20 வருஷங்களுக்கு முன் டெல்லியில் இருந்தபோது கற்றுக் கொண்ட இந்தியைச் சற்றே தூசு தட்டி, டிரைவர் பேர் கேட்டேன். ''நாராயண் சிங்'' என்றான் அந்த இளைஞன்.

'ஆகா... பேரே என்ன சகுனமாக இருக்கிறது! பகவான் நாராயணனே நமக்குச் சாரதி ரூபத்தில் வந்துவிட்டான். இனிமேல் நமக்கு என்ன பயம்!' என்று நிம்மதியாக காரில் ஏறிக் கொண்டோம் (நான், மனைவி, மாமனார், மாமியார்).

நம்பிக்கை தப்பு! நாராயண் சிங் எடுத்த எடுப்பிலேயே ரூர்க்கி போகும் ரஸ்தாவில் 100 கிலோமீட்டரைத் தொட்டான். மலைப்பாதைகளில் சரேல் சரேல் என்று தெலுங்குப் படத்தின் க்ளைமாக்ஸ் காட்சி போல் ஓட்டினான். வாயால் பால் பாயின்ட்டைக் கவ்விக் கொண்டு, இரண்டு கைகளையும் பயன்படுத்தி கார் காஸெட்டை மாற்றி, இமாசலி பாஷையில் நாட்டுப் பாடல்களைக் கேட்டதும் இன்னும் உற்சாகமாகி, மாண்டிகார்லோ போல கொண்டை ஊசிகளைச் சாப்பிட்டான். அனைவருக்கும் வயிற்றில் பயம் பிரவாகிக்க, ''நாராயண் சிங்... தேக்கோ! பத்ரி போனால் மோட்சம் கிடைக்கும் என்றாலும், இத்தனை சீக்கிரத்தில் போக விரும்பவில்லை'' என்று அவனிடம் சொல்ல விழைந்து, நான் பேசிய இந்தி போதாததால் (குளிர்)... சும்மா நகங்களை ருசித்துக் கொண்டு, முழங்கால்களை ஒட்ட வைத்துக்கொண்டு, பகவான் நாராயணன் மேலும், அம்பாஸடரின் சஸ்பென்ஷன் மேலும் நம்பிக்கை வைத்துச் சென்றோம்.

நாங்கள் போன பகுதி உத்தரப் பிரதேசத்தின் கடுவால் ஜில்லாவின் மலைப் பிரதேசம். இமாலய மலைப் பர்வதங்களின் பக்கவாட்டில் கீறி கோடு போட்டாற்போல பார்டர் ரோடு இலாகா சாமர்த்தியமாக அமைத்த பாதை. ஒரு மலையில் ஏறி இறங்கி, ஒரு பெய்லி பாலத்தைக் கடந்து, அடுத்த மலையில் ஏறி மறுபடி இறங்கிச் செல்லும்போது, கூடவே அலகாநந்தா நதி பிடிவாதமாகத் தொடர்கிறது. சில வேளை சிமென்ட் பச்சையில், சில வேளை வெண்மையாக, சில வேளை அகலமாக அருகிலேயே, சில வேளை நரைமுடிபோல் மெல்லிசாகத் தெரியும் ஆழத்தில்! அநேக உற்சாகத்துடன் கற்களை உருட்டிக் கொண்டு இங்கேயும் அங்கேயும் நீரருவிகள் சுதந்திரம் எடுத்துக்கொண்டு, சாலையின் குறுக்கே உற்சாகமாகச் செல்ல... எந்தச் சமயத்திலும் கல் குன்றோ மலைச்சரிவோ எதிர் லாரியோ வரக்கூடிய... உடல் பூரா அட்ரினலின் பிரவகிக்கும் பயணம். ஆழ்வார் சொன்னது சத்தியமே! இளைய வயதிலேயே செல்ல வேண்டிய பயணம். இந்த ரோடுகளைத் தினம் தினம் இயற்கையோடு போராடித் திறந்து வைத்திருப்பதே பெரிய சாதனைதான்!

நாராயண் சிங் உற்சாகமாக, அங்கங்கே இந்தப் பாதையில் விழுந்து நொறுங்கிய பஸ்களையும் அலகா நந்தாவில் அடித்துக் கொண்டு போன உடல்களையும் பற்றி விவரித்து... குளிர் போதாது என்று உபரியாக நடுங்க வைத்துக்கொண்டிருந்தான். புல்டோஸர்களும், டீசல் நாகரிகமும், எஸ்.டீ.டி-யும், ஸாட்டிலைட்டும் உள்ள இந்தக் காலத்திலேயே இத்தனை கஷ்டப்படும்போது, ஆதிசங்கரர் இங்கே வந்து இந்தக் கோயிலை ஸ்தாபித்திருக்கிறார்; திருமங்கையாழ்வார் - தேவப்ரயாகை, ஜோஷிமட், பத்ரி மூன்று இடங்களுக்கும் வந்து பாடியிருக்கிறார் என்பது ஆச்சர்யமாக இருக்கிறது.

பத்ரிகாசிரமத்துக்குப் போகும் வழி உங்களுக்கெல்லாம் தெரியும். டெல்லி போய் அங்கிருந்து ஹரித்வார், ரிஷி கேசம், தேவப்ரயாக், கர்ணப்ரயாக், நந்தப்ரயாக், ருத்ரப்ரயாக், விஷ்ணுப்ரயாக் என்று அங்கங்கே அலகாநந்தா வில் பாகீரதி, மந்தாகினி போன்ற நதிகள் வந்து கலக்கும். சுமார் அரை டஜன் ப்ரயாகைகளைக் கடந்து நகர் (காஷ்மீரத்தது அல்ல). அதன்பின் பீப்பல்கோட்டி, ஜோஷிமட், பத்ரிகாசிரமம். 'கடவுள்களின் பள்ளத்தாக்கு' என்று சொல்லப்படும் சுந்தரச் சரிவு. வீழ்ச்சி. உயரம் 10,350 அடி. பாதை ஹரித்வாரிலிருந்து 333 கி.மீ.

பத்ரிக்குச் செல்ல விரும்புவர்கள் வீட்டில் உள்ள அத்தனைக் கம்பளி சமா சாரங்களையும் கொண்டு செல்லவும். (பயங்கரமாகக் குளிரும்). ஊறுகாய் (சப்பாத்தி சாப்பிட்டு நாக்கு செத்துப் போகும்). ஃப்ளாஸ்க் (வெந்நீர், டீ போன்ற சமாசாரங்களுக்கு). டார்ச் லைட் (உத்தரப் பிரதேசம் முழுவதும் வோல்டேஜ் குறைவு அல்லது பவர்கட்). உங்களிடம் இருக்கும் பழைய சட்டைகள் (ஏழைகளுக்குக் கொடுக்க. விவரம் பின்னால்). செம்பு (தலையில் மொண்டு குளிக்க. நதியில் இறங்கமுடியாது. குளிரில் சுருங்கிப் போய் முற்றுப்புள்ளியாகிவிடுவீர்கள்). முதலுதவி, ரத்தக்காயம் முதலானவற்றுக்கு மருந்து மாயங்கள், சகல உபாதைகளுக்கும் மாத்திரைகள். டைகர்பாம், அமிர்தாஞ்சன். மூச்சு முட்டினால் மார்பைத் தேய்த்து விட மனைவி.

உத்தரப்பிரதேசத்தில் மிக ஏழ்மையான பகுதி இந்த கடுவால் ஜில்லா. பெண்கள் மூன்று வயதிலிருந்தே கடுமையாக உழைக் கிறார்கள். ஆண்கள் இத்தனைக் குளிரிலும் காலில் செருப்பில்லாமல் பாத்திரம் கழுவுகிறார்கள். அதிகாலையில் வெந்நீர் போட் டுத் தருகிறார்கள். எங்கே நின்றாலும், அங்கே மிக அழகான குழந்தைகளைப் பார்க்கலாம்... பிச்சை கேட்பதை!

கடுவால் பிரதேசத்துக் குழந்தைகளின் கன்னங்களில் மட்டும் ஆப்பிள் தெரிய, நான்கு வயதுச் சிறுமியின் முதுகில் தூளி போட்டு அதன் தங்கையோ, தம்பியோ எட்டிப்பார்க்க... குழந்தைகள் இருவரும் கைநீட்டி, ''சேட் பைசா தே! மாஜி பைசா தே!'' என்கிறார்கள். அம்மா, அப்பா என்ற வார்த்தைகளுக்கு முன்னமேயே 'பைசா தே' கற்றுக் கொடுக்கப் பட்டு, பைசா என்பதன் அர்த்தமோ, பிச்சை என்பதன் கொடுமையோ தெரியாத அறியாமையி லேயே பிச்சையெடுக்கத் துவங்கி விட்ட கடவுள் துண்டங்கள்!  இத்தனை வருஷம் ஆகியும் ஆதார ஏழ்மையை ஒழிக்க முடிய வில்லையே... எங்கே தப்பு? ஜன நாயகத்தைத் தூக்கி எறிந்துவிட லாமா? எல்லாக் குழந்தைகளும் விதிவிலக்கின்றி கந்தலாக, மிகக் கந்தலாக உடுத்திக்கொண்டு பிச்சை எடுக்கும் காட்சி உள்ளத்தை உருக்குகிறது. ஆகவேதான் பத்ரிக் குச் செல்லும்போது, பீரோ பீரோவாகக் குவித்து வைத்திருக்கும் பழைய துணிகளை எடுத்துச் சென்று அவர்களுக்குக் கொடுங் கள். பத்ரி நாராயணன் மிகவும் சந்தோஷப்படுவார்.

'பத்ரி' என்றால் இலந்தை மரமாம். இலந்தை மரத்தின் கீழ் நர நாராயணன் ஆயிரமாயிரம் வருஷங்களாக மோனத்தவத்தில் இருந்ததாகவும், பிற்காலத்தில் நர நாராயணன்... அர்ஜுனன் கிருஷ்ணனாக அவதரித்ததாகவும் அவர் தவமிருந்து ஏறக்குறைய கொன்று விட்ட ராட்சஸன் கர்ணனாகப் பிறந்ததாகவும் பலவிதமான கதைகள் சொல்கிறார்கள்.

கொஞ்சம் சரித்திர உண்மைகள்... இந்தக் கோயில் 8-ம் நூற்றாண்டிலிருந்து பௌத்த ஆதிக்கத்தில் இருந்தது. ஆதிசங்கரரால் வைணவத் தலமாக மாற்றப்பட்டு, இங்கே ஒரு பீடம் அமைத்தது (தாமம் என்று சொல்கிறார்கள்). உண்மைதான். இல்லாவிட்டால் கேரளத்து நம்பூதிரிகள் இங்கே பூஜை செய்வதை விளக்கவே முடியாது. திருமங்கைமன்னன் 20 பாட்டுக்கள் பாடியிருக்கிறார். ஜோஷிமட்தான் இவர் பாடிய 'பிரதி' என்கிறார்கள். பெரியாழ்வார் 'கண்டம் கடினகர்' என்று, அலகாநந்தா முடிந்து கங்கை ஆரம்பிக்கும் தேவப்ரயாகையைப் பாடியிருக்கிறார். பத்ரி, 1937 வரை நம்பூதிரிகளின் ராஜ்யமாக இருந்து பிரிட்டிஷாரால் உத்தரப்பிரதேசம் வசம் ஒப்படைக்கப்பட்டது.

மலையடிவாரத்தில் சிவப்பும் தங்கமுமாக இத்தனை பிரயாசைக்குப் பின் சற்றே ஏமாற்றம் தரும், சற்றே குருத்வாராவை நினைவுபடுத்தும் அமைப்புள்ள சிவன் கோயில். விக்கிரகங்கள் குபேரன், கருடன், லக்ஷ்மி, நாரதர், வீற்றிருந்த திருக்கோலத்தில் இரண்டு திருக்கரங்களுடன் நாராயணன். (புத்தர்?) வருஷம் பூராவும் வெந்நீர் சொரியும் தப்த குண்டம். அதில் உற்சாகமாகக் குளிக்கும் சர்தார்ஜிகள் (ஆம், அவர்களும் வருகிறார்கள்). 21 தலைமுறை முன்னோர்களுக்கும் பிண்டப்ர தானம் செய்ய அலகாநந்தாவின் கரையில் கோட்டு போட்டுக் கொண்டு மந்திரம் சொல்லும் பண்டாக்கள். தெலுங்கும் கன்னடமும் பெங்காலியும் இந்தியும் பஞ்சாபியும் ஒலிக்கும் ஒரு மினி இந்தியாவின் பக்தர் கூட்டம்.

வழக்கம்போல இச்சிலி பிச்சிலி சாமான்கள் விற்கும் கடைகள், இட்லி தோசை கிடைக்கும் தென்னிந்திய ஓட்டல்கள். என்ன... இட்லி கொஞ்சம் கல்லாக இருக்கும். அடிக்கு அடி சாமியார்கள், யோகிகள்...

இந்து மதத்தின் அத்தனை விசித்திரங்களும் பளிச்சிடும் பத்ரி எல்லையை அடைந்தவுடன் எனக்கு ஏற்பட்ட முதல் உணர்ச்சி, காப்பாற்றப்பட்டோம்... தப்பித்தோம் என்பது தான்! மானுடர்களாகிய நாம் எத்தனைச் சிறியவர்கள், அற்பமானவர்கள் என்பதை வானளாவிய பனித்தொப்பி போட்ட மலையுச்சிகளை நோக்கும்போது, இயற்கையின் மௌனமான கோபத்துடன் உணர முடிகிறது.

நன்றி: ஆ.விகடன்

Monday, March 10, 2008

426. "வாத்தியார்" சுஜாதாவின் இரங்கல் கூட்டம் - பாகம் 5

டோண்டு தன் பதிவில் சொல்லாமல் விட்ட விஷயங்கள் இப்பதிவில் இருக்கலாம்.

இரங்கல் கூட்டம் குறித்த எனது முந்தைய பதிவுகளை வாசித்து விட்டுத் தொடரவும்.

சுஜாதாவின் இரங்கல் கூட்டம் - பாகம் 1
சுஜாதாவின் இரங்கல் கூட்டம் - பாகம் 2
சுஜாதாவின் இரங்கல் கூட்டம் - பாகம் 3
சுஜாதாவின் இரங்கல் கூட்டம் - பாகம் 4

ஒளிப்பதிவாளர்/இயக்குனர் தங்கர்பச்சான் பேசியதை வைத்துப் பார்க்கும்போது, வாத்தியாருக்கு மிக நெருங்கினவராக தன்னை அவர் உணர்ந்து கொண்டதை புரிந்து கொள்ள முடிகிறது.

வாத்தியாரின் கதைகளில் (ஓர் எழுத்தாளனுக்குரிய) சமூக அக்கறையும், மெல்லிய கோபமும் வெளிப்பட்டது என்றும், தனது டிப்ளமா படிப்பின்போது வாத்தியாரின் "வந்தவன்" கதையை பிராஜெக்டுக்காக படமாக்கியது பற்றியும் தங்கர் பேசினார். ஆங்கில இலக்கியத்தை தமிழுக்கு இட்டு வந்ததில் வாத்தியாரின் பங்கு அதிகம் என்றும், அவர் தன்னை ஒரு மகன் போல் பாவித்தார் என்றும் தங்கர் நெகிழ்ச்சியாக தெரிவித்தார்.

தனக்கு கணினி அறிவு இல்லை என்று வாத்தியாரிடம் ஒரு முறை குறைபட்டுக் கொண்டபோது, அவர், "கம்ப்யூட்டர் தெரிஞ்சவன் எல்லாம் புத்திசாலியில்ல, தங்கர், இப்டியெல்லாம் யோசிக்காம உங்க வேலையப் பாருங்க, அதில் உங்க திறமையைக் காட்டுங்க!" என்று நம்பிக்கை ஊட்டியதை தங்கர் நினைவு கூர்ந்தார்.

முதியோர் இல்லத்தில் வசிக்கும் பெற்றோரை மையமாக வைத்து தான் எழுதிய கதையை வாத்தியாரிடம் சொன்னபோது, அவர் லேசாக அழுததை (ஒரே ஒரு தடவை!) தான் கண்டதாகவும், தான் போட்டுக் காட்டிய 'பாரதி' படத்தை பார்த்து விட்டு வாத்தியார் பாராட்டியதாகவும், பல எழுத்தாளர்களை உருவாக்கியதில் வாத்தியாரின் பெரும்பங்கை யாரும் மறுக்க முடியாது என்றும் தங்கர் பேசினார்.

தனது மனக்கஷ்டங்களின்போது, வாத்தியாரிடம் பேசி தான் ஆறுதல் அடைந்தது பற்றியும், வாத்தியாரின் நெற்றியில் விழும் அந்த கீற்று முடி அவரது மறக்க முடியாத அடையாளம் என்றும் தங்கர் கூறினார். வாத்தியாரின் விமர்சனம் தனது பல கதைகளுக்கு மெருகு கூட்டியது என்றும், கடைசியாக அவரை சந்தித்தபோது, தனது 'தாய் மண்' கதையை அவரிடம் சொன்னது குறித்தும் தங்கர் தெரிவித்தார்.

(அமெரிக்க சென்ற) பிள்ளைகளைப் பிரிந்து வாத்தியாரும், அவரது துணைவியாரும் தனியாக வாழ்ந்த விஷயத்தில், தான் புத்திசாலி என்று கருதும் அவர் புத்திசாலித்தனமாக நடந்து கொள்ளவில்லை என்பதை வாத்தியாரிடமே நேரடியாகக் கூறியபோதும் கூட, அவர் ஒரு புன்னகையுடன், "தூரமா இருந்தாக் கூட, பாசம் இருக்கும், தங்கர்!" என்று துளியும் கோபமின்றி பதில் கூறியதை நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார்.

கூட்டுக் குடும்பத்தையும், உறவுகளையும், கல்வி என்ற அசுரன் பிரித்துக் கொண்டிருப்பதாக தனக்கே உரிய பாணியில் சாடி, தங்கர் தன் பேச்சை நிறைவு செய்தார் !!!

எஸ்.ராமகிருஷ்ணன்:
சுஜாதாவை வாசகராகப் பார்த்த ஒரு தரப்பினரும், அவரை ஆதர்சமாகக் கொண்ட ஒரு தரப்பினரும் உள்ளனர். இது போல் ஒரு எழுத்தாளருக்கு அமைவது கடினம். வகுப்பறையில் கற்க முடியாத எதையும் கற்றுத் தரும் ஒரு "வாத்தியாராக" அவர் விளங்கினார்! கணையாழியின் கடைசிப் பக்கங்களில் சுஜாதா ஒரு முறை, "நல்ல வாசகர்கள் எழுத்தாளரை சந்திக்கவும் மாட்டார்கள், கடிதம் எழுதவும் மாட்டார்க்ள்" என்று கூறியிருக்கிறார் (எஸ்.ரா இப்படிப் பேசியது, வாய்ப்பிருந்தும் (தேசிகன் வாயிலாக) வாத்தியாரை நேரில் சந்தித்துப் பேச முடியாமல் போன எனக்கு மிக்க ஆறுதலாக இருந்தது!)

வாத்தியார் திறமையை இனம் காண்பதில் வல்லவர் என்பதை, அவர் பல வருடங்களுக்கு முன்பே கமலும், அருந்ததி ராயும் பெரிய அளவில் வருவார்கள் என்று தீர்க்கதரிசனத்துடன் சொன்னதை நினைவு கூர விரும்புகிறேன்.

'பூர்ணம் தியேட்டர்ஸ்' ரமேஷ், தான் பலப்பல விஷயங்களை வாத்தியாரிடம் பகிர்ந்து கொண்டிருப்பினும், அன்னியோன்யமாக நாம் உணர்ந்தவர்களிடம் நாம் பேசியது ஞாபகத்தில் இருப்பதில்லை என்றும், "பாரதி இருந்த வீடு" என்ற தங்கள் நாடகத்தைப் பார்த்து விட்டு வாத்தியார், "என்ன ரமேஷ், உங்க நாடகத்துல எல்லாரும் திகட்ட திகட்ட நல்லவங்களா இருக்காங்களே!" என்று கமெண்ட் அடித்ததையும் குறிப்பிட்டார். வாத்தியாரின் நகரம், வீடு, குதிரை போன்ற கதைகள் மறக்க முடியாதவை என்றும், அவரது 'ஸ்ரீரங்கத்துக் கதைகள்' ஒரு வகையில் 'சென்னை 28' திரைப்படத்திற்கு இன்ஸ்பிரேஷனாக இருந்திருக்க வாய்ப்புண்டு என்றும் கூறினார்.

ஒரு தடவை வாத்தியாரிடம் சில கவிதைகளை இரண்டு மூன்று முறை வாசித்தாலும் புரிவதில்லை என்று தான் கூறியவுடன், 'புரியலேன்னா விட்ருங்க ரமேஷ்' என்று வாத்தியார் சீரியஸாகச் சொன்னாராம்! 'கவிதை என்பது உனக்கு அப்பாற்பட்டது' என்ற அர்த்தத்தில் தான் வாத்தியார் அப்படிச் சொல்கிறாரோ என்று சந்தேகப்பட்டு ரமேஷ் மறுபடியும், "ஏன் அப்டி சொல்றீங்க ?" என்று விடாப்பிடியாகக் கேட்டபோது வாத்தியார், "எனக்கும் கூட சில கவிதைகள் எத்தனை தடவை வாசிச்சாலும் புரியறதில்ல, ரமேஷ்" என்று ஒரு போடு போட்டதையும் நகைச்சுவையாக ரமேஷ் நினைவு கூர்ந்தார் !!! "நான் நிரந்தரமானவன் அழிவதில்லை எந்த நிலையிலும் எனக்கு மரணமில்லை" என்ற கண்ணதாசனின் வரிகள் சுஜாதாவுக்கு பொருந்தும் என்றும் ரமேஷ் குறிப்பிட்டார்.

நண்பர் (ஓவியர்/பதிவர்) தேசிகன்:
வாத்தியாருடனான தன் முதல் சந்திப்பை நினைவு கூர்ந்த தேசிகன், அச்சமயம் தான் சுஜாதா சாரின் படம் ஒன்றை தன் கைப்பட வரைந்து, அதில் கையெழுத்து வாங்க அவரை அணுகியபோது, வாத்தியார், "அட, யார் இது ? என்னைப் போலவே இருக்கே!" என்று தனது usual ஸ்டைலில் கேட்டு விட்டு படத்தில் கையெழுத்து போட்டுக் கொடுத்தாராம் ! அவரது பல கதைகளை வாத்தியார் தன்னுடன் டிஸ்கஸ் செய்தது பற்றியும், தனக்கு அவரது official biographer என்ற அந்தஸ்தை வாத்தியார் வழங்கியதையும், வாத்தியார் புதிய skoda கார் வாங்கியவுடன், அதில் சென்ற முதல் ரவுண்டில் தன்னையும் கூட்டிச் சென்றதையும் தேசிகன் மிக்க நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார்.

தனது திருமணப் பத்திரிகையைக் கொடுத்து அழைக்க வாத்தியார் வீட்டுக்குச் சென்றபோது, பத்திரிகையைப் பார்த்து விட்டு தேசிகனைப் பார்த்து, "உன் விதியும் அப்படியிருந்தால், நான் என்ன செய்ய முடியும் !" என்று வாத்தியார் கூறவே, அவர் அப்படிச் சொன்னதின் அர்த்தம் புரிய தேசிகனுக்கு சற்று நேரமானதாம் (தேசிகனின் மனைவி பெயரும் சுஜாதா :))

தேசிகன் அன்று பேசிய பிற விஷயங்கள் அவரது அப்போலோ தினங்கள் பதிவில் இருக்கின்றன.

திருமலை (சுஜாதா அவர்களின் சகோதரர்):
அவர் தான் எனக்கு ரோல் மாடலாக விளங்கினார். ரேமண்ட்ஸ் விளம்பரத்தில் வரும் "The Complete man" என்பது அவருக்குப் பொருந்தும் ! நிறைந்த வாசிப்பனுபவம் மிக்கவராக இருந்தார். பல துறைகளிலும் தனது ஆளுமையை/திறமையை நிரூபித்தவர் அவர். அவர் ஒரு Original Thinker ! அவர் நன்றாக வரைவார், கிடார் வாசிப்பார், இசையில் ஞானமுள்ளவர் போன்ற விஷயங்கள் பலருக்கு தெரிந்திருக்காது. 120 ஆண்டுகளில் சாதிக்கத் தக்க விஷயங்களை என் அண்ணன் ஒரு 70 ஆண்டுகளிலேயே சாதித்து விட்டு போய் விட்டார் !!!! He was a Tall man, not just in terms of height but in stature too ! மற்றவரிடம் உள்ள நல்ல விஷயங்களுக்கே அவர் முக்கியத்துவம் கொடுப்பார். எங்கள் குடும்பத்தில் அவர் தான் இன்ஸ்பிரேஷனாகவும், மேற்கோள் காட்டத் தக்கவராகவும் இருந்தார்.

சுதாங்கன் (மூத்த பத்திரிகையாளர்):
எனது இயற்பெயரும் ரங்கராஜன் தான். ரா.கி.ர தான், சுஜாதாவுக்கு பெயர் சூட்டியது போல எனக்கும் இந்தப் பெயரை சூட்டினார். இந்த இரங்கல் கூட்டத்தை நானும், மதனும் கமலும் சேர்ந்து ஆர்கனைஸ் பண்ணியிருந்தால், அதற்கு வேறு அர்த்தம் கற்பிக்கப்பட்டிருக்கும் ! இக்கூட்டத்தை, பார்த்திபனும், வசந்தும், கனிமொழியும் சேர்ந்து நடத்தியது நல்லதாகப் போயிற்று, அவர்களுக்கு என் நன்றிகள்.

ரா.கி.ரங்கராஜனின் மனைவி ஏதோ ஒரு கதையை வாசித்து விட்டு, என்னிடம், 'எப்படி ஒரு மகாத்மா தான் இருக்க முடியுமோ அது போல ஒரு சுஜாதா தான்' என்று மனம் விட்டுப் பாராட்டினார்.

எ.அ.பாலா:
இந்த சமயத்தில் நான் கிளம்பத் தயாராகி விட்டதால், குறிப்பு எடுப்பதை நிறுத்தி விட்டேன். சுதாங்கனுக்குப் பிறகு பேசிய வாத்தியாரின் பெண் உறவினர் ஒருவரும், வாத்தியாரின் டாக்டரும் பேசியதில் சொல்லிக் கொள்ளும்படி ஒன்றும் இல்லை. அவ்விருவரும் வாசித்த (அஞ்சலிக்) கவிதைகளைக் கேட்க, நல்ல வேளை, வாத்தியார் உயிருடன் இல்லை !!!! இப்படி எழுதுவதற்கு வாத்தியார் என்னை மன்னிக்கவும் !

(இரங்கல் கூட்டத் தொகுப்பு நிறைவடைந்தது)

எ.அ.பாலா

Friday, March 07, 2008

425. "வாத்தியார்" சுஜாதாவின் இரங்கல் கூட்டம் - பாகம் 4

டோ ண்டு தன் பதிவில் சொல்லாமல் விட்ட விஷயங்கள் இப்பதிவில் இருக்கலாம்.

சென்ற பதிவில் கமல் கூறிய ஒரு விஷயத்தை விட்டு விட்டேன். சில வருடங்களுக்கு முன் மருதநாயகம் திரைப்படத்துக்காக தான் அது வரை எழுதியிருந்த திரைக்கதை வசனத்தை சீர் செய்வதற்காக வாத்தியாருக்கு கமல் அனுப்பினாராம். சுஜாதாவும் நிறைய நேரம் செலவழித்து ரெவ்யூ செய்து, சிலபல இடங்களில் திருத்திக்
கொடுத்ததோடு, "திரைக்கதை-வசனம்: கமல், சுஜாதா" என்று கமல் குறிப்பிட்டிருந்ததில், "சுஜாதா"வை அடித்து விட்டு, 'என் பெயரை போடத் தேவையில்லை' என்று நோட் போட்டு கமலுக்கு திருப்பி அனுப்பினாராம் ! அதை நினைவு கூர்ந்த கமல், "மருதநாயகத்துக்கு எழுத இன்னும் நிறைய இருக்கும் சூழலில், சுஜாதா சொன்னது போல, அவர் பெயரைப் போட முடியாமலேயே போய் விட்டது, படம் எடுத்தால் என் பெயரைத் தான் போட்டுக் கொள்ள வேண்டும்" என்று உண்மையான வருத்தத்துடன் கூறினார்.

கவிப்பேரரசு வைரமுத்து:
சுஜாதா மரபுகளை உடைத்தவர் என்பது இரங்கல் கூட்டத்தில் கரவொலி கூடாது என்பதை மீறி அவரது வாசகர்கள் பல இடங்களில் தங்களை மறந்து கை தட்டுவதிலிருந்தே புரிந்து கொள்ள முடிகிறது ! இங்கு கஸ்தூரி ரங்கன் பேசும்போது, சுஜாதாவின் உயிரற்ற முகத்தைப் பார்க்க தான் விரும்பவில்லை என்று சொன்னதை என்னால் ஏற்க முடியவில்லை. சுஜாதா விஷயத்தில், வாழ்வு தராத மலர்ச்சியை மரணம் அவருக்குத் தந்ததாகவே கருதுகிறேன். ஏனெனில், அவரது அமைதியான முகத்தைப் பார்த்தபோது, அவரது கடைசி எண்ணம் மலர்ந்த, எழுச்சி மிக்க எண்ணமாகவே இருந்திருக்க வேண்டும் என்று தோன்றியது ! (இங்கு மீண்டும் அரங்கில் கரகோஷம்!)

செத்தபிறகு தான் எழுத்தாளர்களை தமிழர்கள் சிங்காரித்துப் பார்க்கிறார்கள். இதற்கு மாறாக, இருக்கும்போதே பாராட்டு விழா எடுக்க வேண்டும்! சுஜாதா வாழ்ந்தபோதே, இதே நாரதகான சபாவில் அவரை நடுநாயகமாக அமர்த்தி, நாமெல்லாம் அவரை பாராட்டிப் பேசியிருந்தால், அந்த பூரிப்பில் அவர் இன்னும் ஒரு பத்து ஆண்டுகள் வாழ்ந்திருப்பாரோ ?

சுஜாதாவின் எழுத்துகள் ஆழமான கடலுக்கு நிகரானது. அக்கடலில், சில வாசகர்கள் காலை மட்டும் நனைக்கவும் முடியும், சிலர் கட்டுமரம் செலுத்தவும் முடியும், சிலர் கப்பல் செலுத்தவும் முடியும், இன்னும் சிலர் அதில் மூழ்கி முத்தெடுக்கவும் முடியும் ! பிரபந்த வாசிப்பு அவருக்கு ஊட்டத்தைக் கொடுத்தது. மேல் நாட்டு இலக்கியதையும் நம் நாட்டு இலக்கியத்தையும் கலந்து அவர் தந்த fusion-ஐ, அதன் தனித்தன்மைக்காக
சுஜாதாயிஸம் என்று கூறுவேன்! (இங்கு மீண்டும் அரங்கில் கரகோஷம்!) ஏதோ ஒரு கதையில், ஒரு பெண்ணின் நிர்வாணப்படத்தைப் பற்றி சுஜாதா, "அவள் புன்னகையை மட்டும் அணிந்திருந்தாள்" என்று எழுதிய வரி என் மனதில் நிற்கிறது!

அவரது "தேவன் வருகை" சிறுகதையை உலகச் சிறுகதைகளில் சிறந்த பத்து கதைகளில் ஒன்றாக நான் கருதுகிறேன். வாசகரை பலவித சாத்தியங்களை உணர வைக்க வல்லது அக்கதையின் முடிவு! 'வாசகன் பெரியவனா, மரணம் பெரியதா?' என்ற கேள்விக்கு வாசகன் தான் பெரியவன் என்று தான் பதில் கூற முடியும், ஏனெனில் மரணத்துக்குப் பின்னும் ஓர் எழுத்தாளனை (அவனது எழுத்துகளை) வாழ வைப்பது அவனது வாசகன் தானே !!!

சுஜாதாவின் மறைவிலிருந்து நான் கற்றது இவை தான்.
1. எழுத்தாளன் சாகும்வரை எழுதிக் கொண்டே இருக்க முடியும்
2. உடல் உபாதைகள் எழுத்துக்கு எதிரி அல்ல
3. சக எழுத்தாளன் பற்றி புறம் பேசாமை, சக எழுத்தாளனை மதித்தல்.

அடுத்துப் பேசிய பிரகாஷ் சுவாமி, வாத்தியார் அமெரிக்கா சென்றிருந்தபோது, அறுவை சிகிச்சை பற்றி அவர் ஆங்கிலத்தில் எழுதிய 'All are my relatives' என்ற கட்டுரையை வாசித்த ரோஸன்தால் என்ற மூத்த பத்தரிகையாளர், சுஜாதாவின் ஆங்கிலப் புலமையையும், கட்டுரையின் satire-யையும், நகைச்சுவையையும் வெகுவாகப் பாராட்டி, வாத்தியாரின் நடை Art Buchwald-க்கு (அமெரிக்காவின் நம்பர் ஒன் நகைச்சுவை எழுத்தாளராக பலகாலம் விளங்கியவர்) நிகரானது என்று சிலாகித்ததை நினைவு கூர்ந்தார் !

வாத்தியார் பத்திரிகையாளர்கள் மேல் அன்பும் மரியாதையும் காட்டியவர் என்றும், ஒரு முறை Emmy விருதுகள் வழங்கும் ஜூரியில் ஒருவராக பிரகாஷ் சுவாமியை நியமித்தபோது, வாத்தியாருக்கு தொலைபேசிய அவர், அந்த விருது குறித்தும், விருதுக்குரியவரை தேர்ந்தெடுக்கும் வழிவகை பற்றியும் தனது அறியாமையை
வெளிப்படையாக வாத்தியாரிடம் எடுத்துக் கூறினாராம் ! வாத்தியார் எழுதிஅனுப்பிய விளக்க மடல், ஒரு ஜூரியாக தன் கடமையை தான் செவ்வனே செய்வதற்கு மிக்க உறுதுணையாக இருந்ததை பிரகாஷ் குறிப்பிட்டு, சுஜாதாவுக்கு தெரியாத விஷயங்கள் மிகக் குறைவு என்று தன் பேச்சை முடித்துக் கொண்டார் !

பதிவர் எல்லே ராம், சுஜாதாவின் யாகம் என்ற கதையை நாடகமாக ஆக்கி அமெரிக்காவில் அரங்கேற்றியதையும், வாத்தியாருக்கு எழுத்து உத்தியோகமாக இல்லாததால் தான் தமிழ் மேல் அவருக்கிருந்த காதல் மாறாமல் இருந்தது என்றும் குறிப்பிட்டார்.

சத்யராஜ், விக்ரம் படப்பிடிப்பின்போது வாத்தியாருடன் நெருங்கிப் பழகும் வாய்ப்பு ஏற்பட்டது என்றும், அவரது எழுத்து ஆளுமையையும், வாசிப்பையும் பார்த்து தான் பிரமித்தது பற்றியும் பேசினார். அவரது கடவுள் பற்றிய கட்டுரைகளிலோ அல்லது வாசகர் கடவுள் பற்றி கேள்வி எழுப்பும்போதோ, தான் மிகச் சிறந்த அறிவாளியாகக்
கருதும் சுஜாதா, 'கடவுள் இருக்கிறார்' என்று ஒருபோதும் கூறிவிடக் கூடாதே என்று தான் டென்ஷன் அடைந்தது (!)
குறித்தும் பேசினார் !!!

கனிமொழி:
சுஜாதாவின் எழுத்துக்களால் பாதிக்கப்படாத வாசகரோ, எழுத்தாளரோ இருக்க முடியாது! எது நல்ல சினிமா, எது நல்ல கதை என்று சுஜாதா வாயிலாக வருவதை மதித்த ஒரு வாசக / எழுத்தாள வட்டமிருக்கிறது என்பது தான் உண்மை, சிலர் அதை வெளிப்படையாக ஒப்புக் கொள்ளாவிட்டாலும் கூட !!!

'ஒரு எழுத்தாளரின் வாசகராக நீங்கள் இருந்தால், அவரை நேரில் சந்திக்கக் கூடாது, நீங்கள் உங்களுள் உருவாக்கி வைத்த அவரது பிம்பம் கலைந்து விடக் கூடும்' என்று சுஜாதா சார் அடிக்கடி கூறுவார் என்றும், ஆனால் சுஜாதா விஷயத்தில் தான் நேர் எதிராக உணர்ந்ததாகவும் கனிமொழி உள்ளார்ந்த அன்போடு குறிப்பிட்டார். சுஜாதா சிறிதும் காழ்ப்பற்றவர் (இதற்கு உதாரணமாக, ஒரு முறை ஒரு எழுத்தாளர் சுஜாதாவை தாறுமாறாக விமர்சனம் செய்து வந்த விஷயத்தை கனிமொழி சுஜாதவிடம் சுட்டிக்காட்டியபோது, வாத்தியார் குறிப்பிட்ட எழுத்தாளர் எழுதிய அருமையான ஹைக்கூ கவிதைகள் பற்றிக் கூறி பேச்சை மாற்றியதை குறிப்பிட்டார்!) என்றும், ஒரு Celebrity எழுத்தாளர் என்ற நினைப்பே இல்லாமல் இயல்பாகப் பழகியது பற்றியும், தான் அவரை ஒரு மிகச் சிறந்த எழுத்தாளர் என்பதைக் காட்டிலும் ஒரு மிகச் சிறந்த மனிதராக எண்ணுவதாகவும் கனிமொழி தெரிவித்து தன் பேச்சை சுருக்கமாக நிறைவு செய்தார்.

(அடுத்த பதிவில் இரங்கல் கூட்டத் தொகுப்பு நிறைவடையும்)

எ.அ.பாலா

Thursday, March 06, 2008

424. "வாத்தியார்" சுஜாதாவின் இரங்கல் கூட்டம் - பாகம் 3

டோண்டு தன் பதிவில் சொல்லாமல் விட்ட விஷயங்கள் இப்பதிவில் இருக்கலாம்.

அடுத்துப் பேசியவர் தூர்தர்ஷனின் முன்னாள் இயக்குனர் திரு.நடராஜன் அவர்கள். AIR-க்காக 1970-இல் ராஜாஜி நகரில் சுஜாதாவை 20 நிமிடங்கள் பேட்டி கண்டதை நினைவு கூர்ந்து, வாத்தியார் அதை ஒரு மாடல் பேட்டி என்று பாராட்டியதையும் குறிப்பிட்டார். திருமதி சுஜாதாவை meticulous என்று பாராட்டிவிட்டு, பெங்களூரில் வாத்தியாருடன் வாரம் ஒரு திரைப்படம் பார்த்த நாட்கள் பற்றியும், ஒரு நாடக விழாவுக்காக வாத்தியாரின் "என்றாவது ஒரு நாள்" கதையை நாடகமாக்கியது குறித்தும், வாத்தியாரின் சங்கீத ஞானத்தை சிலாகித்தும் நடராஜன் பேசினார்.

ஜெ.காவும், சுஜாதாவும் தானும் ஓர் இரவு முழுதும் கென்னத் லாட்ஜில் ஒரு அறையில் இலக்கிய அரட்டை அடித்த நிகழ்வு பற்றி நடராஜனும் நகைச்சுவையாகப் பேசினார். ஜெ.கா (சாவி வாங்கித் தரும் சாம்பார் சாதத்தை எப்போது வேண்டுமானாலும் சாப்பிட்டுக் கொள்ளலாம் என்று கூறியபடி!) வாத்தியாரையும் நடராஜனையும் வற்புறுத்தி இழுத்துச் சென்று, அவர் மட்டும் இரவு முழுதும் தண்ணியடித்தபடி, தங்களை பட்டினி போட்டதை நினைவு கூர்ந்த நடராஜன், அதிகாலையில் ஜெயகாந்தனைப் பார்த்து, "எவ்வளவு நேரம் சிப்ஸ் சாப்பிட்டு பொழுது போக்குவது?" என்று தாங்க முடியாமல் கேட்க, பின்னர் மூவரும் இம்பாலா ஓட்டலில் பரோட்டா சாப்பிட்ட மலரும் நினைவுகளை சுழல விட்டார் :)

வாத்தியார் நட்புக்கு இலக்கணமாகத் திகழ்ந்தவர் என்றும், தான் அவரது எழுத்துகளுக்கு தீவிர விசிறி என்றும், அதே சமயம் வாத்தியாரின் பழகும் தன்மைக்கும், நற்குணங்களுக்கும் அடிமை என்றும் உணர்ச்சிகரமாகப் பேசி தன் உரையை நிறைவு செய்தார்!

(இயல்பாகவும் நகைச்சுவையாகவும் பேசிய) பேராசிரியர் ஞானசம்பந்தன் தான் பேச்சாளர் ஆனதற்கு வாத்தியார் தான் இன்ஸ்பிரேஷன் என்றும், வாத்தியார் எழுத்தில் கடைபிடித்த வேகத்தையும், சுருக்கத்தையும் தான் தனது பேச்சில் கடைபிடிப்பதாகவும் தன் பேச்சைத் தொடங்கினார். ஞானசம்பந்தன் ஒரு முறை வாத்தியார் வீட்டுக்குச் சென்று எது பற்றியோ நகைச்சுவையாக பேசிக் கொண்டிருந்தபோது, சுஜாதா தனது மனைவியை அழைத்து, "இவர் எவ்வளவு அருமையா பேசறார், பாரேன்!" என்று கூறியபோது, திருமதி சுஜாதாவோ தான் பேராசிரியரை அடிக்கடி தொலைக்காட்சியில் பார்ப்பதால் தனக்கு ஆச்சரியம் ஏதுமில்லை என்று புன்னகைத்தாராம் :) இந்த பாராட்டால் தான் மிக்க மகிழ்ச்சியுற்றதாகவும், வாத்தியார் கள்ளம் கபடு இல்லா உள்ளம் கொண்டவர் என்பதற்கு இது சான்று என்றும் பேராசிரியர் குறிப்பிட்டார் ! ஞானசம்பந்தனின் பேச்சை கமல் மிகவும் ரசிப்பதாக ஒரு மேடைக் குறிப்பு வரவே, பேராசிரியர் தன் பேச்சைத் தொடர்ந்தார் !

வாத்தியாரின், "சசி காத்திருக்கிறாள்" என்ற சிறுகதையை, தான் வாசித்ததில் மிகச் சிறந்த ஒன்றாகக் கருதுவதாகவும், வாத்தியார் ஆழமான விவரங்களை தெரிந்து வைத்திருப்பவர் (இதற்கு உதாரணமாக, ஒரு முறை வாத்தியாருடன் மதுரை அழகர் கோயிலுக்கு ஞானசம்பந்தன் சென்றபோது, மதுரைக்காரரான பேராசிரியருக்கேத் தெரியாத விஷயமான, 'ஆண்டாள் பள்ளிப்படுத்தப்பட்ட இடம் அழகர் கோயில்' என்பதை சுஜாதா சொன்னபோது தான் ஆச்சரியப்பட்டதை குறிப்பிட்டார்!) என்றும் கூறினார்.

வாத்தியாரின் மர்ம நாவலான நிர்வாண நகரத்தை சிலாகித்துப் பேசிய ஞானசம்பந்தன், ஒரு கதையில் வசந்த் கணேஷைப் பார்த்து கூறும், "அவ நடையப் பாருங்க பாஸ், புதுமைப்பித்தன் நடை தோத்துரும்" என்று வாத்தியார் 'போகிற போக்கில்' எழுதியிருப்பதையும், 'திமலா' என்ற அறிவியல் புனைவுக் கதையை ஒரு பாசுரத்துடன் வாத்தியார் நிறைவு செய்த நேர்த்தியையும் சுட்டிக் காட்டினார் ! வாத்தியார் போல அறிவியல்/தொழில்நுட்பம் கற்றவர்கள் தமிழுக்கு வர வேண்டும் என்ற வேண்டுகோளோடு தன் இரங்கல் உரையை நிறைவு செய்தார்.

வாத்தியார் தனது 60 ஆண்டு கால நண்பர் என்று நெகிழ்ச்சியுடன் தன் பேச்சை ஆரம்பித்த கணையாழியின் கஸ்தூரி ரங்கன், அவருடன் வீட்டுக்குள் கிரிக்கெட் விளையாடிய பால்ய பருவத்தை நினைவு கூர்ந்தார்! தான் சுஜாதாவின் உடலுக்கு மரியாதை செலுத்தப் போகாததற்குக் காரணம், தன் நினைவில் அவரது மலர்ந்த முகமே என்றும் இருக்க வேண்டும் என்பதற்காக மட்டுமே என்ற கஸ்தூரி ரங்கன், கணையாழி நடத்தி வந்த 30 ஆண்டு காலத்தில், இலக்கிய ரீதியாக தாங்கள் எவ்வளவோ பகிர்ந்து கொண்டிருக்கிறோம் என்று குறிப்பிட்டார்.

எழுத்துக் கடமை (முக்கியமாக, ஆன்மிகம் சார்ந்த) முடிவுறாத நிலையிலேயே, சுஜாதா காலமாகி விட்டதாக தான் உணர்வதாக க.ர. கூறினார். சமீபத்தில் தொடங்கப்பட்டிருக்கும் "யுகமாயினி"யில் கடைசி 16 பக்கங்களை "கணையாழி பக்கங்கள்" என்று ஒதுக்கி, அதில் சுஜாதா, இந்திரா பார்த்தசாரதி, க.ர மற்றும் திருப்பூர் கிருஷ்ணன் ஆகியோர் எழுத இருந்ததாக் குறிப்பிட்ட க.ர, ஓர் இதழுக்கு மட்டுமே சுஜாதா எழுத முடிந்தது (இது தான் வாத்தியார் கடைசியாக எழுதியது!) துரதிருஷ்டமே என்று கூறினார். வாத்தியாரின் மறைவுக்குப் பிறகு, "Best of Sujatha" என்ற தலைப்பில் யுகமாயினியில் இ.ரா.முருகன் எழுதுவார் என்று க.ர. கூறி தன் பேச்சை நிறைவு செய்தார்.

கமலஹாசன் தான் எழுதியதை எல்லாம் வாசிக்க / விமர்சிக்க வைத்து வாத்தியாரை படுத்தியிருப்பதாகவும், இனிமேல் தான் எழுதுவதை யாரிடம் காண்பித்து சரி செய்து கொள்வது என்றும் நெகிழ்ச்சியாகக் கூறினார். வாத்தியாரின் (மொழிபெயர்க்கப்பட்ட) சில கதைகளை மலையாள வாசகர்கள் சிலாகித்துப் பேசும்போது (தமிழில் அவருக்கு உரிய மரியாதை அளிக்கப்படவில்லை என்பதற்காக) தான் கோபம் அடைந்ததாகவும், வாத்தியாரின் இரங்கல் கூட்டத்துக்கு இவ்வளவு பேர் வந்து மரியாதை செலுத்துவது வாசகத் தரத்தை உயர்த்திக் காட்டுகிறது என்றும் கூறிய கமல், இரங்கல் கூட்டத்துக்கு வந்த வாசகர்களுக்கு தனது நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.

வாத்தியாரிடம் (அவரது விரிந்த வாசிப்பினால்) மேல்நாட்டுத் தாக்கம் இருந்தபோதிலும், அந்த வாசிப்பில் பெற்றதை, இந்தச் சூழலுக்கேற்ப தமிழாக்கம் செய்ததால் தான் அவர் எழுத்து பெருவெற்றி அடைந்தது என்றும், ஒரு காலத்தில் வாத்தியாரைப் பார்ப்பதற்காகவே தான் பலமுறை பெங்களூருக்கு சென்றிருப்பதாகவும் கமல் கூறினார். முதன்முதலில் வாத்தியாரை சந்திப்பதற்கு முன்னால், அவர் வீட்டுக்கு தொலைபேசிய கமல், "Can I speak to Sujatha?" என்று வினவ, ஒரு பெண்குரல், "Speaking, நீங்க யார் பேசறது ?" என்றவுடன் ராங் நம்பர் என்று இருமுறை கமல் ·போனை வைத்து விட்டாராம் ! மறுபடியும் நிதானமாக டயல் செய்து, "Can I speak to writer Sujatha?" என்று கேட்க, திருமதி சுஜாதா, தொலைபேசியை கணவரிடம் தந்தாராம் :)

கமல் தனது வெளிப்படையான ஸ்டைலில், ஒரு கதையில் வாத்தியாரின் "ஏராளமான மார்புகள்" என்ற சொற்பிரயோகத்தைக் கண்டு தான் அசந்து விட்டதாகக் கூறினார் !!!

வைரமுத்து, தங்கர் பச்சான், கனிமொழி, ராமகிருஷ்ணன், தேசிகன், சுதாங்கன் ஆகியோர் பேசியதையும் எழுதினால், இப்பதிவு நீண்டு விடும் அபாயம் இருப்பதால், அடுத்த பதிவில் இரங்கல் கூட்ட நிகழ்வின் தொகுப்பை நிறைவு செய்கிறேன். தயவு செய்து காத்திருக்கவும் !

Tuesday, March 04, 2008

423. "வாத்தியார்" சுஜாதாவின் இரங்கல் கூட்டம் - பாகம் 2

டோண்டு தன் பதிவில் சொல்லாமல் விட்ட விஷயங்கள் இப்பதிவில் இருக்கலாம்.

சாரு நிவேதிதா தனக்கு 2 நாட்களாக தூக்கமில்லை என்றும், பதற்றமாக இருப்பதாகவும் சொல்லி தன் பேச்சைத் தொடங்கினார். தனது இரண்டு ஆசான்கள் சுஜாதா மற்றும் ஜெ.கா என்றும், பாரதம், உபனிஷத், இன்னபிற விஷயங்கள் ஜெ.கா விடமிருந்து கற்றதாகவும், நவீன விஷயங்களை வாத்தியாரிடம் கற்றதாகவும் உணர்ச்சிகரமாகக் கூறினார். அதோடு, திருமதி சுஜாதா வாத்தியாரை போஷித்ததால் தான், அவர் வீட்டுக் கவலைகள் இன்றி எழுத்தில் வெற்றி பெற முடிந்தது என்றும், வாத்தியாரை அப்பாவாக நினைத்து அவர் பிரிவினால் வாடும் மனுஷ்யபுத்ரன், வசந்த் மற்றும் கனிமொழிக்கு தனது இரங்கல்களை தெரிவிக்க விரும்புவதாகவும் சொன்னார். மேலும், நடிப்புக்கு என்று பார்த்தால், சிவாஜிக்குப் பிறகு கமல், அவருக்குப் பிறகு சில நல்ல இளம் நடிகர்கள் இருப்பது போல, வாத்தியாரின் பாணியிலும், ரேஞ்சிலும் எழுத அவருக்குப் பிறகு யாருமே இல்லை என்பது தான் யதார்த்தம் என்று சாரு புகழாரம் சூட்டினார்.

சிவாஜி என்ற பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட, வாத்தியார் எழுதிய முதல் கதையை மீட்டுத் தருபவருக்கு, பாதி சாம்ராஜ்ஜியத்தை தந்து, மகளையும் மணமுடித்துக் கொடுப்பதாக சுஜாதா 'சாவி'யில் ஓர் அறிவிப்பு விட்டதை சாரு நினைவு கூர்ந்தார். அவ்வறிவிப்பை வாசித்து தான் வாத்தியாரின் மருமகனாக ஆகும் வாய்ப்பு உள்ளதை எண்ணி குதூகலம் கொண்டு, சாவி வார ஏடுக்கு, தன்னிடம் வாத்தியாரின் அந்த 'முதல்' கதை பத்திரமாக இருப்பதாகவும், திருமணத்தை எங்கு எப்போது வைத்துக் கொள்ளலாம் என்று கேட்டும் சாரு ஒரு கடிதம் எழுதினாராம் :)

அந்த 'முதல்' கதையின் காப்பியை வாங்கித் தரும்படி சுஜாதா தன்னை நச்சரிப்பதாக சாருவுக்கு கடிதம் எழுதிய சாவி, வாத்தியாருக்கு மகள் கிடையாது என்ற உண்மையையும் வெளிப்படுத்தினார். சாருவும் பதிலுக்கு தானும் பொய் சொன்னதாக ஒப்புக் கொண்டதை சாரு நகைச்சுவையாக நினைவு கூர்ந்தார். வாத்தியார் Roald Dahl போல எழுதுவதாக வாத்தியாரிடமே தான் கூறியதையும், வாத்தியாருக்கு (ஒரு நல்ல படைப்பாளிக்கு மிக அவசியமான) வாசிப்பின் மீது இருந்த passion பற்றியும், வாத்தியாரின் தொடர்ந்த கற்றலினால் அவர் எழுத்துக்கு என்றுமே வயதாகாதது பற்றியும், பாரதிக்குப் பிறகு வாத்தியார் ஒரு Cultural Force ஆக விளங்கியது குறித்தும் சாரு தனது பேச்சில் குறிப்பிட்டார்.

அரங்க மேடையில், வாத்தியாரின் நீண்ட விரல்கள் பேனாவோடு உறவாடும், enlarage செய்யப்பட்ட ஒரு வித்தியாசமான புகைப்படத்தை சுட்டிக் காட்டிப் பேசிய சிவசங்கரி, சுஜாதா இந்த வித்தியாசமான அஞ்சலிக் கூட்டத்தை ஏற்றுக் கொண்டிருப்பார் என்றும், தமிழை எளிமைப்படுத்தியவர் பாரதி, அடுக்களைப் பெண்களையும் வாசிக்க வைத்தவர் கல்கி, தொழிலாளர்களையும் வாசிக்கச் செய்தவர் சி.பா.ஆ என்ற வரிசையில் இளைய தலைமுறையை மொத்தமாக ஈர்த்தவர் என்ற பெருமைக்குரியவர் சுஜாதா என்றும் கூறினார்.

வாத்தியார் தனது 40 வருட நண்பர் என்று நினைவு கூர்ந்த சிவசங்கரி, வாத்தியார் visual writing என்பதை தமிழுக்குக் கொண்டு வந்ததையும், சிறுகதைகள், நாவல்கள், நாடகங்கள், கட்டுரைகள், இலக்கியம், கேள்வி-பதில் என்று அனைத்திலும் முத்திரை பதித்ததையும், சாவி அவர்கள் வாத்தியாருக்கும், வேணுகோபாலனுக்கும் தனக்கும், 'நட்சத்திர அந்தஸ்து' பெற்றுத் தந்ததையும், வாத்தியார் தன் எழுத்துக்கு பெரிய இன்ஸ்பிரேஷனாக இருந்ததையும், வாத்தியார் தமிழ் எழுத்துலகில் ஒரு trend setter ஆக பல காலம் விளங்கியதையும் குறிப்பிட்டுப் பேசினார். 30 வருடங்களுக்கு முன் வாத்தியார் மற்றும் அவரது குடும்பத்தினருடன் ஒரு முறை ஸ்ரீரங்கம் சென்று செலவிட்ட மகிழ்ச்சியான தருணங்களை நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார்!

மதன், சுஜாதா கட்டிய கண்ணுக்குத் தெரியாத மேம்பாலத்தில் பயணித்த எழுத்தாளர்களில் தானும் ஒருவன் என்றும், வாத்தியார் மீடியாவில் எப்போது பொறுப்பேற்றுக் கொண்டாலும் உடனடியாக ஊழியர்களின் சம்பளத்தை ஏற்றியது பற்றியும், அவரது மகத்தான அறிவால் பலரையும் அண்ணாந்து பார்க்க வைத்தவர் என்றும், வாத்தியார் (குறைந்த) ஊதியத்தைப் பற்றிக் கவலைப்படாததால் தான் சினிமாவில் பரிமளிக்க முடிந்தது என்றும், திறமை மிக்கவர்களை சினிமாவுக்கு வரவழைக்க எழுத்தாளர்களின் சம்பளத்தை கூட்ட வேண்டும் என்றும்,வாத்தியார் தமிழ்நாட்டை விடுத்து வேறெங்காவது பிறந்திருந்தால் இன்னும் நிறைய சம்பாதித்து இருப்பார் என்றும், சில controversial விஷயங்களை தொட்டுப் பேசினார் !

Pentamedia சந்திரசேகர், James Hadley Chase, Harodl Robbins வாசித்த தலைமுறையை நைலான் கயிறு, அனிதா இளம் மனைவி போன்ற நாவல்களால் தமிழுக்குத் திருப்பிய பெருமை வாத்தியாரையே சாரும் என்றும், தனது நிறுவனம் தயாரித்த பாண்டவாஸ், அலிபாபவும் 40 திருடர்களும், புத்தா, கல்லிவர் டிராவல்ஸ் போன்ற அமிமேஷன் படங்களுக்கு அவரது திரைக்கதையும், எளிய ஆங்கில வசனமும் வலு சேர்த்தன என்றும், வாத்தியார் ஒரு நிஜமான 'multi media' (வானொலி, டிவி, சினிமா, பத்திரிகை ..) மனிதர் என்றும் சிலாகித்துப் பேசினார். Pentamedia அலுவலகத்தில் வாத்தியார் பயன்படுத்திய அறையை கடந்த 2 வருடங்களாக யாரும் பயன்படுத்தவில்லை என்றும் நெகிழ்ச்சியாகக் கூறினார்.

ஓவியர் ஜெயராஜ் ஜாலியாகப் பேசினார். வாத்தியார் எழுத்தில் சுவாரசியமும், spontaneity-யும் இருந்தது என்பதற்கு எடுத்துக்காட்டாக, "எதிர்வாடையில் ஒரு ஜெயராஜ் போய்க் கொண்டிருந்தது" என்று சுஜாதா எழுதியதை அவர் சுட்டியவுடன் அரங்கில் கைதட்டல் ! வாசகரின் அறிவுத்திறனை மதித்தும், வட்டார வழக்கை கூர்மையாக அவதானித்தும் வாத்தியார் எழுதினார் என்றும் ஜெ குறிப்பிட்டார். வாத்தியார் நகைச்சுவையை காஷ¤வலாகவும், subtle ஆகவும் வெளிப்படுத்துவதில் கெட்டிக்காரர் என்றாலும், அவரை தமிழகத்தின் பெர்னார்ட் ஷா என்றெல்லாம் உளர தான் விரும்பவில்லை என்றும், மற்றவர்களை மனம் திறந்து பாராட்டுவதில் வாத்தியாருக்கு நிகர் அவரே என்றும் ஜெ கூறினார் !

ஒரு முறை சாவி நடத்திய வாசகர் விழா ஒன்றில், சுஜாதாவை இளைஞர்கள் மொய்த்துக் கொண்டு, தங்கள் சட்டையைக் கழற்றி மார்பில் கையெழுத்து இடுமாறு அன்புத் தொல்லை செய்தபோது, வாத்தியார் கண்களோ அங்குமிங்கும் அலை பாய்ந்தன. 'என்ன தேடறீங்க?' என்று ஜெ கேட்க, 'வாசகிகள் யாரையும் காணோமே!' என்றாராம் வாத்தியார் :)

இன்னொரு சமயம், மாரீஸ் ஓட்டலில் மேடையில் பேசுவதற்கு முன்னால் தான் நெர்வஸாக இருந்தபோது வாத்தியாரிடம் டிப்ஸ் கேட்டதையும், அதற்கு சுஜாதா மெல்ல, 'எனக்கும் உதறலாத் தான் இருக்கு!' என்றதையும் நினைவு கூர்ந்த ஜெ, வாத்தியாருக்கே உதறல் என்ற சங்கதி தனக்கு தெம்பைக் கொடுத்ததால், மேடையில் அன்று சிறப்பாக தான் பேச முடிந்ததாகவும் நகைச்சுவையாகக் கூறினார். அன்று, பேச்சை முடித்துக் கொண்டு ஜெ மேடையை விட்டு இறங்கியவுடன், வாத்தியார், "என்னய்யா, உதறி முடிச்சாச்சா?" என்று கலாய்த்ததை இன்று நினைத்தாலும் சிரிப்பை அடக்க முடியவில்லை என்று ஜெயராஜ் கூறினார் :)

வாத்தியார் இல்லை என்ற விஷயத்தை தன்னால் தாங்க முடியவில்லை என்று நெகிழ்ச்சியுடன் ஜெ தன் உரையை முடித்துக் கொண்டார் !

மற்ற பிரபலங்கள் பேசியவை மூன்றாம் (இறுதி) பாகத்தில் வரும் !

எ.அ.பாலா

Monday, March 03, 2008

422. "வாத்தியார்" சுஜாதாவின் இரங்கல் கூட்டம் - பாகம் 1

டோண்டு தன் பதிவில் சொல்லாமல் விட்ட விஷயங்கள் இப்பதிவில் இருக்கலாம்.

வகுப்பறைக்கு அப்பாற்பட்டு நான் கற்றுக் கொண்ட பலவற்றுக்கும், சில சமயங்களில் தூண்டுகோலாகவும் பல சமயங்களில் ஆசானாகவும் நான் நினைக்கும் சுஜாதா சாருக்கு சென்னை நாரத கான சபாவில் நேற்று இரங்கல் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது, தேசிகன் மூலம் தெரிய வந்தது, சென்றிருந்தேன். சுஜாதா மட்டுமே தமிழ் எழுத்துலகின் (வாசகர்களுக்கும், பல எழுத்தாளர்களுக்கும்!) உண்மையான ஜனரஞ்சக வாத்தியார் என்றால் அது மிகையாகாது !

நான் சென்றபோது பாதி அரங்கமே நிறைந்திருந்தது, ஆனால் மெல்ல மெல்ல ஒரு 90% நிறைந்து விட்டது. வாத்தியாரின் வாசகர்கள் ஆகவும் நண்பர்கள் ஆகவும் விளங்கிய பிரபலங்கள் பலர் உரையாற்றினர். அவர்கள் பேசியதிலிருந்து, சுஜாதா என்பவர் பெரிய எழுத்தாளர்/சிந்தனாவாதி/அறிவுஜீவி என்பதை தாண்டி, ஒரு மிகச் சிறந்த மனிதர் என்பது புரிந்தது !

முதலில், விஜய் டிவியில் வாத்தியார் முன்பொரு முறை அளித்த பேட்டி (சிகரம் தொட்ட மனிதர்கள் என்ற நிகழ்ச்சிக்கு) ஒளிபரப்பப்பட்டது. அதில் அவர், PG Wodehouse தனது 93வது வயதில் ஒரு கதையை டைப் அடித்துக் கொண்டிருந்தபோதே இறந்து போன நிகழ்வைக் கூறி, அதே போல மரணிக்கும் வரை எழுதிக் கொண்டிருக்க வேண்டும் என்ற ஆசை தனக்கும் இருப்பதாகச் சொன்னது கொஞ்சம் நெகிழ்ச்சியைத் தந்தது! அப்படியே மரித்தும் போனார் தானே !!!

அதன் பின், வாத்தியாருக்குப் பிடித்த திவ்யபிரபந்தப் பாசுரத்துடன் நிகழ்ச்சி ஆரம்பித்தது.
பாடியவர்: நெய்வேலி சந்தானகோபாலன் அவர்கள் புதல்வி ஸ்ரீரஞ்சனி
இயற்றியவர்: குலசேகர ஆழ்வார்
பாசுரம்:
செடியாய வல்வினைகள் தீர்க்கும்* திருமாலே*
நெடியானே வேங்கடவா* நின்கோயிலின் வாசல்*
அடியாரும் வானவரும்* அரம்பையரும் கிடந்தியங்கும்*
படியாய்க் கிடந்து* உன் பவளவாய் காண்பேனே


பொருத்தமான பாசுரம் என்று தான் தோன்றுகிறது. குலசேகர மன்னன் வேண்டியது போல, வாத்தியார், வைகுந்தத்தில் படியாய் மாறி அவ்வரங்கனை நேரில் கண்குளிர தரிசித்துக் கொண்டிருக்கும் பாக்கியம் பெற்றிருப்பார் என்றே நினைக்கிறேன்!

இரங்கல் நிகழ்ச்சியை சுவைபட தொகுத்தவர் நடிகர் பார்த்திபன். நடுநடுவே அவர் கூறிய சின்னச்சின்ன விஷயங்களில் இரண்டு மனதைத் தொட்டது.

1. பல எழுத்தாளர்களை வாசகராகக் கொண்ட சுஜாதா, தன்னைப் போன்ற வாசகனை எழுத்தாளனாக்கியதை நினைவு கூர்ந்த்தார்.
2. சுஜாதா ஒரு முறை அவர் துணைவியாரிடம், அவருக்காக தான் பெரிய அளவில் எதுவும் சேர்த்து வைத்து விட்டுப் போகாததாகக் கூறியதாகவும், அதற்கு 'உண்மையான' சுஜாதா, "நீங்கள் எழுதிய எல்லாவற்றையும் என் பேரில் தானே எழுதியிருக்கிறீர்கள், அதை விட வேறென்ன வேண்டும் எனக்கு!" என்றாராம் !

பிரபலங்கள் பேசியதில் முக்கியமானவற்றை மட்டும் பகிர்கிறேன்.

மனுஷ்யபுத்ரன் தன் உடலின் ஒரு பகுதியை இழந்தது போல உணர்வதாகவும், சுஜாதா வாசகர் சந்திப்பு நிகழ்வுகளில் ஆர்வமாக பங்கெடுத்துக் கொண்டதையும், வருடாவருடம் வாத்தியார் நினைவாக சுஜாதா விருது வழங்கவிருப்பதாகவும் தெரிவித்தார். சுஜாதா தனக்கு புது வாழ்வளித்தவர் என்றும் கூறினார்.

ரா.கி.ர, சுஜாதா என்ற சிறந்த நண்பரின் இழப்பு தன்னை மிகவும் அழ வைத்து விட்டதாகவும், சுஜாதா பத்திரிகை உலக அவசரங்களுக்கு மதிப்பு கொடுத்த விதத்திற்காக அவரை Editor's Delight என்று சிலாகித்தும், பாரதி போல, கல்கி போல இன்னொரு சுஜாதா வருவதற்கும் சாத்தியமில்லை என்றும் அஞ்சலி செலுத்தினார்.

வாத்தியாரின் மைத்துனியும், எம்.ஓ.பி. வைஷ்ணவா கல்லூரி முதல்வரும் ஆன நிர்மலா பிரசாத், தங்கள் கல்லூரியின் ஏகலைவர்கள் (மாணவிகள்) ஒரு துரோணாச்சாரியரை இழந்து வாடுவதையும், வாத்தியாரின் ஸ்ரீரங்கத்து தேவதைகள் தமிழ் துணைப்பாட நூலாக சேர்க்கப்பட்டதும் தமிழ் வகுப்புகளில் 100% அட்டென்டன்ஸ் ஆனதையும், உரைகள்/சந்திப்புகள் வாயிலாக தமிழ் ஜர்னலிஸம் மாணவிகளுக்கு (கல்லூரியின் நிஜமான வாத்தியார்களுக்கு மேலாக!) அற்புதமான அறிவுரைகள் / ஆலோசனைகள் வாத்தியார் வழங்கியதையும், வாத்தியார் தனது பாரதி திரைப்பட அறிமுக உரை மூலம், தமிழர் அல்லா மாணவிகளுக்கும் பாரதி மேல் ஈடுபாடு வரச் செய்ததையும் எடுத்துக் கூறினார்.

கிரேசி மோகன் பேசியது சற்றே உருக்கமாக இருந்தது. பெங்களூரில் தனது நாடகங்களுக்கு வாத்தியார் வந்திருந்து, குழந்தை போல குலுங்கிக் குலுங்கி சிரித்து, கண்ணில் நீர் வர ரசித்ததை மோகனும் மற்றவரும் திரை மறைவிலிருந்து பார்த்து பரவசப்பட்டதையும், நாடகம் முடிந்தவுடன் குறைநிறைகளை (லாயர் கணேஷ் போல) வாத்தியார் அழகாக அலசியதையும் கிரேசி நினைவு கூர்ந்தார். மேலும், வாத்தியார் நாடகத்துறைக்கு செய்த சேவை மகத்தானது என்றும், வாத்தியார் (திவ்ய பிரபந்தம் மேல் அவருக்கு இருந்த காதலால்) தற்சமயம் வைகுண்டத்தில் பெருமாள் பக்கத்தில் இருப்பதை விட ஆழ்வார்கள் அருகே இருப்பதையே விரும்புவார் என்றும் சுவைபடக் கூறினார்.

மூத்த எழுத்தாளர் ஜெயகாந்தன், மனைவி பெயரில் எழுதியவர்கள் மேல் தனக்கு பெரிய அபிப்பிராயம் இருந்ததில்லை என்றும், சுஜாதா அதை மாற்றியதாகவும், வாத்தியார் தனது கதைகளில் பெண்களை 26,36 என்று நம்பர்களாக ஆக்கியதையும் நகைச்சுவையாக குறிப்பிட்டார்! இறந்தவுடன் சுஜாதா எல்லோருக்கும் வேண்டப்பட்டவர் ஆயிட்டார் என்று ஜெ.கா சொன்னதை ஏற்க முடியவில்லை. வாழும்போதே அவர் (சில வலைப்பதிவர்களை தவிர்த்து!) பெரும்பாலானவருக்கு வேண்டப்பட்டவராகவே இருந்திருக்கிறார் என்பது தான் உண்மை. நவீனமான விஷயங்களையும், அறிவியல் / தொழில்நுட்பச் சிந்தனையையும் தமிழுக்குக் கொண்டு வந்ததில் சுஜாதா பெரும்பங்காற்றியுள்ளார் என்று ஜெ.கா சிலாகித்துக் கூறினார். பல ஆண்டுகளுக்கு முன் ஒரு லாட்ஜ் ரூமில் சுஜாதாவுடன் ஓர் இரவு முழுதும் விழித்திருந்து தமிழ் இலக்கியம் பற்றி விவாதித்தையும் நினைவு கூர்ந்தார்.

ஆ.வியின் அசோகன், வாத்தியாரின் தாக்கமே இல்லாத எழுத்தாளர்கள் மிகக் குறைவு என்றும், அவரைப் போல எழுதினாலும் அல்லது அவரைப் போல எழுதாவிட்டாலும், இரண்டுமே பெருமைப்படக் கூடிய விஷயங்கள் தான் என்றும் கூறினார் !

இந்திரா பார்த்தசாரதி, வாத்தியாரின் 'நைலான் கயிறு' ஒரு முன்னோடி என்றும், தான் நாடகம் எழுதுவதற்கு வாத்தியார் தான் இன்ஸ்பிரேஷன் என்றும், தனது 'மழை' என்ற நாடகத்தைப் பார்த்து விட்டு அதை தமிழில் மொழி பெயர்த்தால்(!) நன்றாக இருக்கும் என்று சுஜாதா சொன்னதையும், 1965 காலகட்டத்தில், தானும், சுஜாதாவும், 'கணையாழி' கஸ்தூரி ரங்கனும் தில்லியில், இலக்கியம் சார்ந்த பல விஷயங்களை பகிர்ந்து கொண்டதையும் நாஸ்டால்ஜிக்காகக் கூறினார்.

நடிகர் சிவகுமார், வாத்தியாரின் 'மேகத்தை துரத்தினவன்', நைலான் கயிறு, வைரங்கள், மறுபடியும் கணேஷ், கொலையுதிர் காலம் போன்ற கதைகளை வாசித்தும், அவரது டாக்டர் நரேந்திரனின் விநோத வழக்கு, அன்புள்ள அப்பா போன்ற நாடகங்களை பார்த்தும் தான் 'மிரண்டு' போனதை வாத்தியாரிடமே போன் போட்டுச் சொன்னதைக் குறிப்பிட்டார். வாத்தியார் தங்கள் வீட்டுக்கு தங்க வரும்போது, தன்னிடம் ஒரு லுங்கி வாங்கிக் கட்டிக் கொண்டு, தன்னோடு உணவருந்தி இயல்பாக இருந்த நாட்களையும் சிவகுமார் நினைவு கூர்ந்ததோடு, வாத்தியார் சகமனிதர்களை பலவீனங்களோடு ஏற்றுக் கொண்ட Down to Earth மனிதர் என்றும் சிலாகித்துப் பேசினார். சுஜாதா, கமலை அறிவு வழியாகப் பேசுபவர் என்றும், தன்னை மனசு வழியாகப் பேசுபவர் என்றும் ஒரு முறை சொன்னதை சிவகுமார் குறிப்பிட்டார்!

அடுத்துப் பேசிய திருப்பூர் கிருஷ்ணன், நா.பார்த்தசாரதி அவர்கள் தினமணி கதிர் ஆசிரியராக இருந்தபோது, ஒரு சமயம் வெண்பா போட்டி அறிவித்ததையும், அதற்கு வாத்தியார் "வேண்டாம் வரதட்சிணை" என்ற தலைப்பில் நகைச்சுவை வெண்பா எழுதியதையும், அதை கிருஷ்ணனின் தந்தை கட்டம் கட்டி பதிப்பித்ததையும் குறிப்பிட்டார் !

பத்துபவுன் தங்கம் பளிச்சென்ற கல்வளையல்
முத்திலே சின்னதாய் மூக்குத்தி - மத்தபடி
பாண்டு வைத்து ஊர்கோலம் பாட்டு இவைதவிர
வேண்டாம் வரதட்சிணை!


சுஜாதா ஒரு தசாவதானி என்றும், அவருக்கு எல்லா வித தமிழ் தட்டச்சும் சரளமாக வரும் என்றும் கூறினார். ஒரு சமயம் ஒரு வாசகர், "1330 குறள்கள் இருப்பதால், அதை திருக்குறள்கள் என்று தானே குறிப்பிட வேண்டும், ஏன் திருக்குறள் என்று ஒருமையில் இருக்க வேண்டும் ?" என்று கேட்ட கேள்விக்கு, வாத்தியார் spontaneous ஆக "திருக்குறள் 'கள்'ளை அனுமதிப்பதில்லை" என்று பதில் கூறியதையும், திருமதி சுஜாதாவின் சீரிய கவனிப்பால் தான் ஒரு 10 வருடங்கள் அவர் அதிகமாக உயிர் வாழ்ந்ததாகவும் கிருஷ்ணன் கூறினார்.

சாரு நிவேதிதா, சிவசங்கரி, மதன், ஓவியர் ஜெயராஜ், பேராசிரியர் ஞானசம்பந்தன், கஸ்தூரி ரங்கன், கமல், வைரமுத்து, தங்கர் பச்சான், கனிமொழி, நண்பர் தேசிகன், எஸ்.ராமகிருஷ்ணன் ஆகியோர் இரங்கற் கூட்டத்தில் பேசியதை அடுத்த பாகத்தில் தொடர்கிறேன்.

எ.அ.பாலா

Saturday, March 01, 2008

421. சுஜாதா அஞ்சலிப் பதிவுகள் - பட்டியல்

எழுத்தாளர் சுஜாதாவுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் எழுதப்பட்ட பலப்பல பதிவுகளை / கட்டுரைகளை, வாசிப்பதற்கு வசதியாக அவ்விடுகைகளின் சுட்டிகளை இங்கே (நான்அறிந்தவரை) தொகுத்திருக்கிறேன். விட்டுப் போனவை குறித்து பின்னூட்டத்தில்தெரிவித்தால், அவற்றையும் இப்பதிவில் சேர்த்து விடுகிறேன். நன்றி.

எ.அ.பாலா


http://truetamilans.blogspot.com/2008/03/blog-post.html
(மனதை நெகிழ வைத்த (என்னைப் போன்ற) ஒரு சாதாரண வாசகனின் அஞ்சலி!)

A tribute by Raji

http://balaji_ammu.blogspot.com/2005/05/colossus-by-name-of-sujatha.html
http://balaji_ammu.blogspot.com/2008/02/419.html
http://desikan.com/blogcms/?item=208
http://desikan.com/blogcms/?item=207
http://desikan.com/blogcms/?item=206
http://desikan.com/blogcms/?item=205

http://balaji_ammu.blogspot.com/2008/02/420.html
http://balaji_ammu.blogspot.com/2008/03/422-1.html
http://balaji_ammu.blogspot.com/2008/03/423-2.html
http://balaji_ammu.blogspot.com/2008/03/424-3.html
http://balaji_ammu.blogspot.com/2008/03/425-4.html

http://balakumaranpesukirar.blogspot.com/2008/03/blog-post.html
http://naalavathukann.blogspot.com/2008/03/blog-post.html
http://tamiloviam.com/unicode/02280803.asp
http://karaiyoram.blogspot.com/2008/03/blog-post.html

http://penathal.blogspot.com/2008/02/blog-post.html
http://pitchaipathiram.blogspot.com/2008/02/blog-post_27.html
http://domesticatedonion.net/tamil/?p=741
http://cyrilalex.com/?p=387
http://imohandoss.blogspot.com/2008/02/blog-post_28.html

http://masivakumar.blogspot.com/2008/02/blog-post_28.html
http://kadagam.blogspot.com/2008/02/blog-post_2716.html
http://xavi.wordpress.com/2008/02/28/sujatha/
http://kasiblogs.blogspot.com/2008/02/1935-2008.html
http://jataayu.blogspot.com/2008/02/blog-post_28.html

http://icarusprakash.wordpress.com/2008/02/27/thank-you-sir-for-everything/
http://asifmeeran.blogspot.com/2008/02/blog-post_29.html
http://dondu.blogspot.com/2008/02/have-nice-time-sujatha-sir.html
http://valai.blogspirit.com/archive/2008/02/27/sujatha.html
http://andaiayal.blogspot.com/2008/02/blog-post.html

http://anamikatalks.blogspot.com/2008/02/author-sujatha-is-no-more.html
http://mogadalai.wordpress.com/2008/02/27/sujatha-rip/
http://www.chakkarapani.com/graffiti/?p=316
http://balajiulagam.blogspot.com/2008/02/blog-post_27.html
http://chennai.metblogs.com/archives/2008/02/writer_sujatha_is_dead.phtml

http://www.thinnai.com/?module=displaystory&story_id=20802273&format=html
http://groups.yahoo.com/group/tamil-ulagam/message/38810
http://groups.yahoo.com/group/RaayarKaapiKlub/message/12866

http://naachiyaar.blogspot.com/2008/02/blog-post_28.html
http://alexpandian.blogspot.com/2008/02/blog-post.html
http://rathnesh.blogspot.com/2008/02/blog-post_28.html
http://blogintamil.blogspot.com/2008/02/blog-post_28.html
http://thulasidhalam.blogspot.com/2008/02/blog-post_28.html
http://nganesan.blogspot.com/2008/02/amarar-sujatha.html

http://santhipu.blogspot.com/2008/02/blog-post_28.html
http://vasanthamravi.blogspot.com/2008/02/blog-post_27.html
http://surveysan.blogspot.com/2008/02/blog-post_1876.html
http://devakottai.blogspot.com/2008/02/blog-post_5951.html
http://kadagam.blogspot.com/2008/02/blog-post_2716.html
http://anbudanbuhari.blogspot.com/2008/02/blog-post_7099.html

http://dondu.blogspot.com/2008/02/blog-post_28.html
http://kadalaiyur.blogspot.com/2008/02/blog-post_27.html
http://kadalaiyur.blogspot.com/2008/02/blog-post_1280.html
http://kadalaiyur.blogspot.com/2008/02/blog-post_29.html
http://puthupunal.blogspot.com/2008/02/blog-post.html
http://cdjm.blogspot.com/2008/02/blog-post.html

http://vadakarai.blogspot.com/2008/02/blog-post.html
http://bharateeyamodernprince.blogspot.com/2008/02/blog-post_28.html
http://usthamizhan.blogspot.com/2008/02/blog-post.html
http://jothibharathi.blogspot.com/2008/02/blog-post_28.html

http://kaalapperungkalam.blogspot.com/2008/02/blog-post_2890.html
http://enularalkal.blogspot.com/2008/02/blog-post_9834.html
http://enularalkal.blogspot.com/2008/02/blog-post_27.html
http://feeds.vicky.in/~r/dhandora/~3/242335441/
http://osaichella.blogspot.com/2008/02/blog-post_100.html

http://ravisrinivas.blogspot.com/2008/02/blog-post_29.html
http://thoughtsintamil.blogspot.com/2008/02/blog-post_28.html
http://mrishan.blogspot.com/2008/02/27022008.html
http://pettagam.blogspot.com/2008/02/blog-post_27.html
http://premkg.blogspot.com/2008/02/blog-post_27.html
http://ponvandu.blogspot.com/2008/03/blog-post.html

http://ilackia.blogspot.com/2008/03/blog-post.html
http://bashakavithaigal.wordpress.com/2008/02/28/சுவாரஸ்யம்-போய்விட்டதா-ச/
http://radiospathy.blogspot.com/2008/02/blog-post_28.html
http://oagaisblog.blogspot.com/
http://tvrk.blogspot.com/

http://pradeep.blogspot.com/2008/03/blog-post.html
http://losangelesram.blogspot.com/2008/02/1.html
http://sangappalagai.blogspot.com/2008/03/44.html
http://palipedam.blogspot.com/2008/02/blog-post_28.html
http://madippakkam.blogspot.com/2008/02/blog-post_28.html

http://umakathir.blogspot.com/2008/02/blog-post_27.html
http://nattunadappu.blogspot.com/2008_02_01_archive.html
http://therinjukko.blogspot.com/2008/02/blog-post_27.html
http://harimakesh.blogspot.com/2008/02/189.html
http://koculan.blogspot.com/2008/02/blog-post_28.html

http://sandanamullai.blogspot.com/2008/02/blog-post.html
http://poothoorigai.blogspot.com/2008/02/blog-post_27.html
http://bharateeyamodernprince.blogspot.com/2008/03/blog-post_03.html
http://dondu.blogspot.com/2008/03/blog-post_03.html

http://nagarjunan.blogspot.com/2008/02/blog-post_8509.html
http://varmah.blogspot.com/2008/03/blog-post_02.html
http://valpaiyan.blogspot.com/2008/02/blog-post_27.html
http://mithra11.blogspot.com/2008/03/blog-post.html
http://raasaa.blogspot.com/2008/02/progressive-compromises.html

http://mei-pungkaadan.blogspot.com/2008/02/blog-post_3482.html
http://palipedam.blogspot.com/2008/03/blog-post.html
http://kaalapayani.blogspot.com/2008/02/blog-post_28.html
http://kaalapayani.blogspot.com/2008/02/2.html
http://thiruvadiyan.blogspot.com/2008/02/blog-post_28.html
http://pksivakumar.blogspot.com/2008/02/blog-post_27.html

http://www.tamilstar.com/news/publish/article_5663.shtml

Friday, February 29, 2008

420. இன்று எழுத்தாளர் சுஜாதா வீட்டில்

ஒரு 2 வருடமாக, தேசிகனின் உதவியோடு அவரை நேரில் சந்திக்க எண்ணியபோதெல்லாம், ஏதாவது ஒரு காரணத்தால், சந்திப்பு தள்ளிப் போய்க் கொண்டே இருந்தது.  இப்போது அவரே போய் விட்டார் :( 

இன்று காலை சுஜாதா அவர்களுக்கு அஞ்சலி செலுத்த அவர் வீட்டிற்கு சென்றிருந்தேன்.  பல பிரபலங்கள் வந்திருந்தாலும், சூழல் எந்த வித ஆரவாரமும் இன்றி அமைதியாக சாதாரணமாகவே இருந்தது.  கண்ணாடிப் பெட்டியில் இருந்தவர் உறங்குவது போலத் தான் தோன்றியது.  அருகில் இருந்த தேசிகன் சோகத்தில் இருண்டு போய் காணப்பட்டார்.  கடந்த பல வருடங்களாக சுஜாதா தேசிகனை தனது சொந்த மகன் போலத் தான் பாவித்து வந்ததை நான் அறிவேன்.  தேசிகனும் சுஜாதா மேல் மிகுந்த அன்பும், மரியாதையும் வைத்திருந்ததோடு, தேவையான சமயங்களில் அவர் கூட இருந்து பல உதவிகள் செய்திருப்பதும் எனக்குத் தெரியும். சுஜாதாவுக்கு மிகவும் நெருக்கமானவரான மனுஷ்யபுத்திரனும் சோகமே வடிவாக காட்சியளித்தார். அவரிடமும்,  தேசிகனிடமும் என் இரங்கலைத் தெரிவித்தேன் !

நான் அங்கு செல்வதற்கு சற்று முன்பு தான் கலைஞரும், கமலும் தங்களது இறுதி மரியாதையை செலுத்தி விட்டு சென்றிருந்தனர்.  மதனையும், இயக்குனர் வசந்த்தையும், கனிமொழியையும் (சுஜாதாவுக்கு மிக நெருக்கமானவரும் கூட) பார்த்தேன். நான் பார்த்தவரை, பாலு மகேந்திரா, சுஹாசினி, மணிரத்னம், பிரமிட் நடராஜன், சிவகுமார், அவரது மகன் கார்த்திக், பாலகுமாரன், அனுராதா ரமணன், சாரு நிவேதிதா, வைகோ, திருமாவளவன் என்று பல பிரபலங்கள் இரங்கல் தெரிவிக்க வந்தனர். வந்தவர்களை வைத்துப் பார்த்தால், தமிழ் எழுத்தாளராக, சுஜாதா ஏதோ சாதித்து இருப்பார் போலத் தான் தெரிகிறது !!!  பதிவர்களில் ரஜினி ராம்கி, டோண்டு, அதியமான், உண்மைத்தமிழன், இரா.முருகன், ஹரன் பிரசன்னா என்று சிலரை சந்திக்க முடிந்தது. 

எனக்கும் சுஜாதாவுக்குமான உறவு, எழுத்தாளர்-வாசகன் என்பதோடு முடிந்து விடுகிறது.  அவர் எழுத்துக்களோடு மட்டுமே எனக்கு பரிச்சியம் உண்டு. அவர் எழுதியதில் ஒரு 90% வாசித்திருப்பேன்.  என்னவோ, அவர் என்னுள் ஏற்படுத்திய தாக்கத்தை (சிறுகதை, நாவல், நாடகம், சயின்ஸ் பிக்ஷன், அறிவியல்/தொழில்நுட்பம் சார்ந்தவை, கட்டுரைகள்) வேறு யாரும் ஏற்படுத்தவில்லை, அவர் 'இலக்கியம்' என்று பெரிய அளவில் எதுவும் படைத்திராவிட்டாலும்!  அவர் படைப்புகளில் பலவற்றை
இரண்டு மூன்று முறை படித்திருக்கிறேன்.

ஒரே ஒரு முறை அவரை நேரில் பார்த்திருக்கிறேன், 24 வருடங்களுக்கு முன்.  நான் கோயமுத்தூர் GCTயில் பொறியியல் மாணவனாக இருந்த காலகட்டத்தில், எங்கள் மின்னணுவியல் அசோசியேஷன் அழைப்பின் பேரில் வந்திருந்தார்.  அன்றைய கல்லூரி தின விழாவில் extempore-ஆக ஒரு 30 நிமிடங்கள், ஆங்கிலக் கலப்பின்றி அவர் தமிழில் உரையாற்றியதை மறக்கவே முடியாது !!!  அது போலவே, ஒரே ஒரு முறை (2 மாதங்களுக்கு முன்) அவருடன் அம்பலம் சாட்டில் உரையாடியிருக்கிறேன் ! சாட்டுக்குள் சற்று தாமதமாக நுழைந்தும்,  தேசிகனின் நெருங்கிய நண்பர் என்று அறிமுகம் செய்து கொண்டதால், சாட்டை குறிப்பிட்ட நேரத்துக்கு மேல் ஒரு பத்து மணித்துளிகள் நீட்டிக்க முடிந்தது.  நரேந்திர மோடி, கிரிக்கெட், வலைப்பதிவுகள் என்று சில விஷயங்கள் பற்றிய கேள்விகளுக்கு, அவரது பாணியில் பதில் கூறினார்.

அவரது 'ஸ்ரீரங்கத்து தேவதைகள்' கதைத் தொகுப்பு ஒரு மாஸ்டர் பீஸ் என்பதில் சந்தேகமில்லை.  அக்கதைகளில் காணப்படும் அவரது தேர்ந்த (அவருக்கு மட்டுமே வசப்படும்) நடையும், மெலிதாக இழையோடும் நகைச்சுவையும், சில இடங்களில் உருக்கும் சோகமும், நாஸ்டால்ஜியாவைத் தூண்டி நம்மை அசை போட வைக்கும் உத்தியும், அவரது எழுத்து ஆளுமையை பறைசாற்றுபவை!  அவரது தூண்டில்
கதைகளில் காணப்படும், ஜெஃப்ரி ஆர்ச்சரின் A twist in the tale வகை துள்ளல் நடையும், இறுதியில் வரும் எதிர்பார்க்க முடியாத சடார் முடிவும் வாசிப்பவரை கட்டிப் போட்டு விடும்.  கணேஷ் வசந்த் பங்கு பெறும் சஸ்பென்ஸ் த்ரில்லர் கதைகளில், துப்பு துலக்க அவர்கள் இருவரும் உரையாடும் கட்டங்களையும், மேற்கொள்ளும் சாகசங்களையும் சுஜாதாவின் நுண்ணிய அறிவியல் சார் சிந்தனை ஓட்டத்தின்
வெளிப்பாடாக நோக்கலாம்.  'நிர்வாண நகரம்' நாவலில் வரும் (புத்தி கூர்மை மிக்க) நாயகனாகவே நான் சுஜாதாவைப் பார்க்கிறேன் ! 

அவருக்கு இரங்கல்/அஞ்சலி தெரிவிக்கும் வகையில் தமிழ் வலைப்பதிவுலகில் வெளி வந்த நாற்பதுக்கும் மேற்பட்ட இடுகைகள் சுஜாதா ஏற்படுத்திய வாசக தாக்கத்துக்கு சான்று!  அவற்றில் குறிப்பிடத்தக்கவை கனடா வெங்கட், பிரகாஷ், அருள்செல்வன் கந்தசுவாமி, பெனாத்தல் சுரேஷ், காசி, டோ ண்டு, விக்கி (இன்னும் சில பெயர்கள் நினைவுக்கு சட்டென்று வர மறுக்கிறது!) எழுதியவை.  ஒரு விஷயம் உறுத்தலாக இருக்கிறது.  பொதுவாக, ஒருவர் இருக்கும்போதே அவரைப் பாராட்டி நாம் எழுதுவதே இல்லை என்று கூறலாம், விமர்சனம் என்ற பெயரில் குறைகளை மட்டுமே எழுதுகிறோமோ என்று தோன்றுகிறது :(

வாசகர்கள் வாழ
ஸ்ரீரங்கத்து தேவதைகள் வாழ
கணேஷ் வசந்த் மதுமிதா வாழ
ஆத்மா ஜினோ அனிதா வாழ
நீர் 'கற்றதும் பெற்றதும்' வாழ

நீர் ஏனய்யா நூறாண்டு வாழாமல் சென்று விட்டீர் ?

சுஜாதா சார், "பிரிவோம் சந்திப்போம்" !!!

என்றென்றும் அன்புடன்
பாலா

தோன்றிற் புகழொடு தோன்றுக அஃதிலார்
தோன்றலிற் தோன்றாமை நன்று.

Thursday, February 28, 2008

A COLOSSUS by the name of SUJATHA!

மீள் பதிவு (posted on 3 MAY 2005)
********************************
இந்த வார விகடனில், சுஜாதா அவர்களின் "கற்றதும் பெற்றதும்" மிக மிக உணர்வு பூர்வமாக எழுதப்பட்ட ஒன்று. வயதானால் ஏற்படும் உடல்/மன/குண மாற்றங்களை தனது அசத்தலான பாணியில் நகைச்சுவையாக எழுதியிருக்கிறார். அவர் உடலுக்கு தான் வயதே ஒழிய மனம் இன்னும் இளமையாக இருப்பதாகவே தோன்றுகிறது.


அதற்கு உதாரணம், அவரைப் போன்ற இன்னொரு தாத்தாவின் வயதை கண்டுபிடிக்க அவர் மேற்கொள்ளும் சாகசம் :-) (பார்க்க, தேசிகனின் ஹாப்பி பர்த்டே சுஜாதா
!
)


//எதிர்காலம் என்பதை இப்போதெல்லாம் வருஷக் கணக்கில் நினைத்துப் பார்ப்பது இல்லை. மாதக் கணக்கில்... ஏன், உடம்பு சரியில் லாமல் இருக்கும்போது வாரக் கணக்கில், நாள் கணக்கில் அந்தந்த நாளை வாழத் தோன்றுகிறது. Today I am alright, thank God!
//


யதார்த்தத்தை எவ்வளவு நெகிழ்ச்சியாக வெளிப்படுத்தியிருக்கிறார்! எனக்கென்னவோ, அவர் பல ஆண்டுகளாக, அயற்சியில்லாமல் தனது உடலையும், மூளையையும் வருத்திக் கொண்டதன் விளைவாகவே (அதனால் பலருக்கு அவரது எழுத்துக்கள் வாயிலாக மிகுந்த சந்தோஷம் கிடைத்தது என்றாலும்) தற்போது பலவித உடல் நலக்குறைவுகளால் கஷ்டப்படுகிறார் என்று தோன்றுகிறது. அவர் இன்னும் பல ஆண்டுகள் நலமுடன் இருக்க பிரார்த்திக்கிறேன்.


//கிட்டத்தட்ட அறுபது ஆண்டுகளுக்கு முன், சின்ன வயசில் கோயமுத்தூரில் அம்மா அப்பாவுடன் ஜட்கா வண்டியில் "ஜகதலப்ரதாபன்" சினிமா போனது, ஒண்ணாம் கிளாஸ் டீச்சருக்கு ஆனந்த விகடனும், அமிர்தாஞ்சனும் கொண்டு போய்க் கொடுத்தது, பள்ளி மணியை அகாலமாக அடித்தது, எனக்குத் தம்பி பிறந்தது... இதெல்லாம் தெளிவாக ஞாபகம் உள்ளது. ஸ்ரீரங்கத்துக் கதைகள் அனைத்தும் என் நீண்ட நாள் ஞாபகங்களின் வடிவம்தான்!

டெல்லியில், பெட்ரோல் எழுபத்தைந்து பைசாவும், பால் ஐம்பத்தைந்து பைசாவும் கொடுத்து வாங்கி தாராளமாக வாழ்ந்தது, என் முதல் கதை, முதல் நாவல் பிரசுரமானது, எஸ்.ஏ.பி'யின் கடிதக் குறிப்பு எல்லாம் ஞாபகம் உள்ளது.
//

NOSTALGIA போன்ற ஒரு சுகமான உணர்வு உலகத்தில் கிடையாது என்று பறைசாற்றுபவை அவரது ஸ்ரீரங்கத்துக் கதைகள்.

ஸ்ரீரங்கத்து கதைகளை (முழுத்தொகுப்பாக) மறுபடியும் படித்தபோது ழரு பிரமிப்பு லற்பட்டது! ஒவ்வொரு கதையும் ஒரு நல்முத்து! அவற்றை படிக்கையில், திரு.R.K.நாராயணன் அவர்களின் "Malgudi Days" ஏற்படுத்திய அதே அளவு தாக்கத்தையும், ஒரு வித சுகமான "Nostalgic" உணர்வுகளையும் அனுபவிக்க முடிந்தது. அந்தக்காலத்து மிக அழகான ஸ்ரீரங்கத்தையும், மக்களையும், பெருமாளையும் நம் கண் முன் கொண்டு வந்து நிறுத்தி, அவற்றை படித்து முடிக்கும் வரை, அவரது தேர்ந்த, unique "கதை சொல்லும் பாணி" என்ற கயிற்றினால் நம்மை கட்டிப்போட்டு விடுகிறார்!!

குறிப்பாக, "அரசு பகுத்தறிவுப் பாசறை" ஓரு "Real Classic"! Jeffrey Archer-இன் பாணியை திரு.சுஜாதா மிக அருமையாக தமிழில் கையாண்டிருக்கிறார். எவரும் எதிர்பார்க்காத ஓரு முடிவு தான் அக்கதையின் சிறப்பு! அடுத்ததாக, "மாஞ்சு" என்ற கதை, உள்ளத்தை உருக்கி விடுகிறது. "மறு" என்ற கதையில் வரும் நிகழ்ச்சிகளை உண்மையில் நடந்ததாகத் தான் நினைக்கத் தோன்றுகிறது!!


//சயின்ஸ் அதிகம் படித்ததால், கடவுளைப் பற்றிய குழப்பங்கள் தீர்க்க முடியாமல் இருக்கின்றன. யேட்ஸ் சொன்னதுபோல், "சிலர் கடவுள் இருக்கிறார் என்கிறார்கள். பிறர் கடவுள் இல்லை என்கிறார்கள். உண்மை ஒருக்கால் இரண்டுக்கும் இடையில் எங்கோ இருக்கிறது!".
//

எங்கேயோ படித்திருக்கிறேன். ஒரு பெரிய தத்துவ மேதை (நாத்திகர்) இறக்கும் தருவாயில், தனது சீடர்களை அழைத்து, "நான் இத்தனை நாள் கடவுள் இல்லை என்று சொல்லி வந்ததை மட்டும் கொள்ளாமல், நீங்கள் உங்கள் வழியில் அது உண்மையா என்று ஆராய வேண்டும்" என்றாராம். சுஜாதா சொல்லும் குழப்பங்கள் பலருக்கும் உள்ளன.


// நாளடைவில் இந்த இச்சைகள் படிப்படியாகத் திருத்தப்பட்டு, எளிமைப்படுத்தப்பட்டு, எழுபது வயதில் காலை எழுந்தவுடன் சுகமாக பாத்ரூம் போனாலே சந்தோஷப்படுகிறேன். வாழ்க்கையே இவ்வகையில் progressive compromises (படிப்படியான சமரசங்களால் ஆனது).
//

எவ்வளவு எளிமையாகக் கூறி விட்டார்!


//இன்றைய தினத்தில், என் டாப்டென் கவலைகள் அல்லது தேவைகள் என்றால்... முதலிடத்தில் உடல் நலம், மனநலம், மற்றவருக்குத் தொந்தரவு கொடுக்காமல் இருப்பது, தெரிந்தோ தெரியாமலோ யார் மனதையும் புண்படுத்தாமல் இருப்பது, இன்சொல், அனுதாபம், நல்ல காபி, நகைச்சுவை உணர்வு, நான்கு பக்கமாவது படிப்பது, எழுதுவது போன்றவை பட்டியலில் உள்ளன. பணம் அதில் இல்லை. முதலிலேயே அது லிஸ்ட்டை விட்டுப் போய்விட்டது.
//


அவர் கூறிய இந்த TOP TEN-இல் குறைந்தது 9 விடயங்கள் பொதுவாக எல்லா வயதினருக்கும் பொருந்தக் கூடியவையே!!! இளவயதினருக்கு பத்தாவது விஷயமாக 'பணத்தை'க் கூறலாம்!


//என் எழுத்து, என்னைப் பல தேசங்களுக்கு அழைத்துச் சென்றிருக்கிறது. பல வகைப்பட்ட மனிதர்களைச் சந்திக்க வைத்திருக்கிறது. பிரைவேட் ஜெட்டி லிருந்து ஃப்ரீமாண்ட் மிஷன் பீக் மலை யுச்சி மாளிகை வரை அனுமதித்திருக்கிறது. பெயர் தெரியாத வாசகர்கள் நள்ளிரவில் கூப்பிட்டுப் பாராட்டியிருக்கிறார்கள். மனைவிமார்கள் அழுதிருக்கிறார்கள். கணவன்கள், மனைவிகள் மேல் சந்தேகப்பட்டுத் தற்கொலை செய்து கொள்ளுமுன், கடைசி ஆறுதலுக்கு என்னை விளித்திருக்கிறார்கள். ரோஜா வெளிவந்த சமயத்தில், பெங்களூருக் குத் தனியாக ஓடி வந்த இளம்பெண் அதிகாலை ஜலஹள்ளியில், அரவிந்த சாமியுடன் என்னை மண முடி! என்று கதவைத் தட்டி யிருக்கிறாள். "ஆ" கதையைப் படித்துவிட்டு, "என் மகளை மணம் செய்துகொள்ள வேண் டும்" என்று திருநெல்வேலில் இருந்து வந்த மனநிலை சரியில்லாத இளைஞரும், பாலம் கதையைப் படித்து விட்டு என்னைக் கொல்ல வர தேதி கேட்டிருந்த கோவை வாசியும் என் வாசகர்கள்தான். வாழ்க்கையின் அத்தனை பிரச்னைகளுக்கும், முதுகுவலியில் இருந்து முண்டகோபனிஷத் வரை யோசனை சொல்லியிருக்கிறார்கள்; கேட்டிருக்கிறார்கள். மிகச் சிறந்த நண்பர்களையும், அற்புதக் கணங்களையும் என் எழுத்தால் பெற்றிருக்கிறேன். அதுதான் என்னுடைய நோபெல்!
//

இதை வாசிக்கும்போது, அவரது சிறந்த கதைகளில் ஒன்றாக நான் கருதும் "பிரிவோம் சந்திப்போம்" பகுதி இரண்டின் கடைசி பத்தி (நியூயார்க் நகரை அற்புதமாக வர்ணித்து விட்டு, ஆனால் மதுமிதா தான் இல்லை என்று நாயகன் நினைப்பதாக முடித்திருப்பார்!) ஏற்படுத்திய அதே தாக்கம் உண்டானது!!!! அந்த தாக்கத்தின் (பல ஆண்டுகளுக்கு பின்னர்!) வெளிப்பாடு தான், என் மகளுக்கு "மதுமிதா" என்று பெயர் சூட்டியது!!!


அவரே ஒரு கட்டுரையில் எழுதியது போல 'இன்னுமொரு நூற்றாண்டிரும்' என்று அவரை வாழ்த்தி வணங்குகிறேன்.

என்றென்றும் அன்புடன்
பாலா


நன்றி: ஆனந்த விகடன்

419. சாதனையாளர் எழுத்தாளர் சுஜாதா மறைவு

கடந்த சில நாட்களாக அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சுஜாதா அவர்கள், நேற்றிரவு 9 மணி அளவில் காலமானார். அவருக்கு வயது 72. அவர் ஆன்மா சாந்தியடைய பிரார்த்திக்கிறேன்..

அவரை ஒரு முறை சந்திக்க வேண்டும் என்ற ஆசை நிறைவேறாமலேயே போய் விட்டதில் எனக்கு பெரிய வருத்தம். இத்தனைக்கும் தேசிகன் எனது நெருங்கிய நண்பர். ஏதாவது ஒரு காரணத்தால் அவரை சந்திப்பது தட்டிப் போய்க் கொண்டே இருந்தது. இப்போது அவரே போய் விட்டார் :(

தேசிகனிடம் பேசினேன். மிக்க சோகத்தில் இருக்கிறார் என்பது குரலிலேயே தெரிந்தது. கடந்த 2 நாட்களாக நினைவு இன்றி தான் சுஜாதா இருந்ததாக அவர் கூறினார். சுஜாதாவுக்கு, இதயம், நுரையீரல், சிறுநீரகம் என்று அனைத்திலும் பிரச்சினைகள் !

அவரது 70-வது பிறந்தநாளின் போது "இன்னுமோர் நூற்றாண்டு இரும்" என்று வைணவ பாரம்பரியத்தின்படி வாழ்த்தி நான் எழுதிய பதிவு இங்கே

என்றென்றும் அன்புடன்
பாலா

Friday, October 22, 2004

24-oct விகடனில் 'கற்றதும் பெற்றதும்'

சுஜாதா அவர்களின் 'கற்றதும் பெற்றதும்' தொடர் கட்டுரைகளைப் படிக்கும்போது, அறிவுபூர்வமான மற்றும் சுவையான பல விஷயங்களை எளிதாக தெரிந்து கொள்ள முடிகிறது. திரு.சுஜாதாவுக்கு வயதானாலும் கூட, அவர் இளமையாக சிந்திப்பதனால் தான், அவரது எழுத்தில் நகைச்சுவை உணர்வு இன்றும் மிளிர்கிறது! சென்ற வார ஆனந்த விகடனில், அவரது கட்டுரையில், பல இடங்களில் இதைப் பார்க்க முடிகிறது. உதாரணங்களாக, சிலவற்றை எடுத்து தந்திருக்கிறேன்.

1. அவர் சென்றிருந்த அனஸ்தீஸியா பற்றிய விளக்கக் கூட்டத்தில், தனக்கு 'மயக்க மருந்துகளைப் பற்றிய தெளிவும் விழிப்புணர்வும் கிடைத்தது' என்கிறார்! கூறி விட்டு, 'எப்படி சிலேடை?' என வினவுகிறார். நான் என்னவோ இத்தனை காலம், " பெருங்காயம், பருகாத-தேன், என்-பேனா, மறுப்போர்" வகைப்பட்ட சொற்கள் மட்டுமே சிலேடை என எண்ணியிருந்தேன்!

2. அடுத்து, லேட்டஸ்ட்டாக வந்திருக்கிற PROPOFOL எடுத்துக் கொள்ளும்போது (அறுவை சிகிச்சையின் போது தான்!) நமக்கு " 'அய்யோ மிய்யோ' இருக்காதாம்" என்கிறார்! 'அய்யோ மிய்யோ' என்றால் என்ன என்பதை திரு.சுஜாதாவிடம் திரு.தேசிகன் கேட்டுக் கூறினால், அவருக்கு புண்ணியமாகப் போகும்!

3. ANAESTHETIST-ஐ 'மயக்குநர்' என்கிறார்! அதாவது, ஒரு ஆபரேஷனுக்கு, மருத்துவரும் தேவை, மயக்குநரும் அவசியம்.

4. தான் சென்றிருந்த ஒரு கிறித்துவக் குடமுழுக்கு விழாவை, "பிதா சுதன் பரிசுத்த ஆவியின் துணை புதிய பிறவிக்கு எப்போதும் இருக்க வேண்டும் என்று 'ஆஸ்ஸீர்வதிக்கும்' விழா" என்று கூறுகிறார்! Subtle Humour!

5. எளிமையான தமிழ்ச் செய்யுட்களுக்குக் கூட அர்த்தம் புரியாதோரை, 'SMS தமிழர்கள்' என்கிறார்!

6. எல்லாவற்றிற்கும் சிகரம் வைத்தது போல் அமைந்தது,

"உலகம் யாவையும் தாமுளவாக்கலும்
நிலை பெறுத்தலும், நீக்கலும், நீங்கலா
அலகிலா விளையாட்டுடையார் அவர்
தலைவர் அன்னவர்க்கே சரணாங்களே!"

என்ற கம்பரின் கடவுள் வாழ்த்துப் பாடலுக்கு அவர் வழங்கும் 'சென்னைத்தமிழ்' பொழிப்புரையான
"நாமெல்லாம் பொறக்க சொல்ல படச்சு காப்பாத்தி சாவடிக்கிறார் பாரு தல, அவுரு கால்ல உயு வாத்யாரே" என்பது தான்!!!
Deadly Translation Sir!

அவரே ஒரு கட்டுரையில் எழுதியது போல 'இன்னுமொரு நூற்றாண்டிரும்' என்று அவரை வாழ்த்தி வணங்குகிறேன்.

என்றென்றும் அன்புடன்
பாலா

Tuesday, August 17, 2004

ஸ்ரீரங்கத்து கதைகள் - My views

திரு.சுஜாதா எழுதிய ஸ்ரீரங்கத்து கதைகளை (முழுத்தொகுப்பாக) மறுபடியும் படித்தேன். பிரமித்தேன்! ஒவ்வொரு கதையும் ஒரு நல்முத்து! அவற்றை படிக்கையில், திரு.R.K.நாராயணன் அவர்களின் "Malgudi Days" ஏற்படுத்திய அதே அளவு தாக்கத்தையும், ஒரு வித சுகமான "Nostalgic" உணர்வுகளையும் அனுபவிக்க முடிந்தது. அந்தக்காலத்து மிக அழகான ஸ்ரீரங்கத்தையும், மக்களையும், பெருமாளையும் நம் கண் முன் கொண்டு வந்து நிறுத்தி, அவற்றை படித்து முடிக்கும் வரை, அவரது தேர்ந்த, unique "கதை சொல்லும் பாணி" என்ற கயிற்றினால் நம்மை கட்டிப்போட்டு விடுகிறார்!!

குறிப்பாக, "அரசு பகுத்தறிவுப் பாசறை" ஓரு "Real Classic"! Jeffrey Archer-இன் பாணியை திரு.சுஜாதா மிக அருமையாக தமிழில் கையாண்டிருக்கிறார். எவரும் எதிர்பார்க்காத ஓரு முடிவு தான் அக்கதையின் சிறப்பு! அடுத்ததாக, "மாஞ்சு" என்ற கதை, உள்ளத்தை உருக்கி விடுகிறது. "மறு" என்ற கதையில் வரும் நிகழ்ச்சிகளை உண்மையில் நடந்ததாகத் தான் நினைக்கத் தோன்றுகிறது!!


அன்பன்
பாலா


நன்றி நண்பரே !

வருகை தந்தமைக்கு நன்றி! உங்கள் மேலான கருத்துக்களை எதிர்பார்க்கிறேன்!
Related Posts with Thumbnails